தென் ஆப்பிரிக்கா மீதான குற்றச்சாட்டு பொய்
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாக தென் ஆப்பி ரிக்கா மீது அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது.இந்த நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த ஆதாரமும் இல்லை என ஜனாதிபதி சிரில் ரமபோசா பதிலடி கொடுத் துள்ளார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் போராட்டங்கள்
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 230 வேலை நிறுத்தங்களில் 320,000க்கும் அதிகமான தொழிலாளர் கள் பங்கேற்றுள்ளனர். முறையான சம்பளம், வேலைப் பாது காப்பு மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்தக் கோரி அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன்: பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவை பதவி நீக்கம் செய்ய திட்ட மிட்டிருந்த நிலையில் திங்களன்று தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற தலைவரிடம் சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார். ராணுவத்திற்கான உணவு மற்றும் ஆயுத கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரான் - துருக்கி இடையே வர்த்தக ஒத்துழைப்பு
ஈரான் துருக்கி ஆகிய இரு நாடுகளும் ஆண்டுக்கு 30 பில்லியன் யூரோக்கள் (32.33 பில்லியன் அமெரிக்க டாலர் கள்) வர்த்தக இலக்கை அடைய நிர்ணயித்துள்ளன.நாடுக ளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை செயல்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
ஹைகுய் புயல் : நான்காயிரம் பேர் வெளியேற்றம்
ஹைகுய் புயலால் தென்கிழக்கு தைவானில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 4,000 பேர் வெளியேற்றப் பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.நான்கு ஆண்டுகளில் தைவானை நேரடியாக தாக்கிய முதல் புயல் இது.