world

டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

ரோம், ஜூலை 9- இத்தாலியின் டாக்சி ஓட்டுநர்கள் கடந்த மூன்று நாட்க ளாக நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கி றார்கள். இந்தப் போக்குவரத்துத் துறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு எடுத்துள்ள முடிவுகளை எதிர்த்தே இந்த வேலை நிறுத்தம் நடந்துள் ளது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு மீட்சியடைவ தற்கான நிதியைப் பெற ஐரோப்பிய யூனியன் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அந்த விதியின்படி, டாக்சித் துறையில் புதிய விதிகள் நுழைக்கப்படுகின் றன. இந்த விதிகள் நடைமுறைக்கு வந்தால் நியாயமற்ற போட்டியை ஓட்டுநர்கள் சந்திக்க வேண்டி வரும் என்றும், ஆன்லைன் பதிவு உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட பெரு நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும் என்றும் ஓட்டு நர்கள் சங்கங்கள் கூறுகின்றன. ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக காவல் துறை களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது. வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி யுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த விடாமல் காவல்துறை தடுக்க முனைந்துள்ளது. சில இடங்களில் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.