world

img

பீனிக்ஸ் பறவை போல் சிலிர்த்தெழும் லூலா! - கே.ஜே தாமஸ்

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, பிரேசில் புதிய வரலாற்றை எழுத உள்ளது. அதிசயம் ஏதும் நடக்காமல் இருந்தால் பிரேசிலின் 39ஆவது ஜனாதிபதியாக தொழி லாளர் கட்சித் தலைவர் லூலா டி சில்வா தேர்ந்தெடுக்கப்படுவார் . தற்போதைய தீவிர வலதுசாரி ஜெய்ர் போல்சானாரோவை விட லூலா மிகவும் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், லூலா 31 முதல் 47 சதவீத வாக்குகளைப் பெற்று போல்சானாரோவை வீழ்த்துவார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். முதற்கட்ட வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவிகிதத்துக்கு மேல்  வாக்குகளைப் பெறவில்லை என்றால், அக்டோ பர் 30ஆம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும். தான் பிரேசில் ஜனாதிபதியானால் ஊழலற்ற  ஆட்சி மூலம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வ தாக லூலா உறுதியளித்துள்ளார். ஜனநா யகத்திற்கு சவால் விடுகிறார் போல்சானா ரோ. இன்று நாடு எதிர்கொள்ளும் பெரும்  பொருளாதார நெருக்கடிக்கு போல்சானாரோ வின் மோசமான கொள்கைகளே காரணம் என்றும் லூலா வாக்காளர்களை நம்ப வைக் கிறார். 2003 முதல் 2011 வரை ஜனாதிபதியாக இருந்த லூலா, லட்சக்கணக்கான பிரேசிலி யர்களை வறுமையில் இருந்து மீட்ட இடது சாரி தலைவர். ஜனாதிபதியாக இருந்த போது, லூலாவின் சீர்திருத்தங்கள் சமத்துவ மின்மையைக் குறைத்து, பிரேசிலில் பொருளா தார வளர்ச்சியை உறுதி செய்தன.

சர்வாதிகாரிகளின் ஆதரவாளரான போல்சானாரோ

ஆனால் லூலாவின் முக்கிய போட்டி யாளரான போல்சானாரோ, சர்வாதிகாரி களான பெருவின் ஆல்பர்டோ புஜிமோரி, சிலி யின் அகஸ்டோ பினோசெட் ஆகியோரின் தீவிர ஆதரவாளர் ஆவார். அரசாங்கத்தின் வலது சாரி நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் அணிதிரளு மாறு அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர் பிரச்சாரம் செய்கிறார். போல்சானாரோவின் அரசாங்கத்தின் அடை யாளம் ஊழல் என்று பிரேசிலியர்கள் நம்பு கிறார்கள். கறுப்புப் பணம் வெள்ளையாக்குதல், பொய்ச் செய்திகளை பரப்புவதில் அவரது மூன்று மகன்களின் கவனம் உள்ளது. 2018இல் 53 சதவீத மக்களின் ஆதரவுடன்  ஜனாதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட  வேளையில் லூலா பொய் வழக்கில் சிக்கி னார். சாவ் பாலோ நகரில் உள்ள கார் கழு வும் நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடி யிருப்பை லஞ்சமாக பெற்றதாக லூலா மீது  குற்றம் சாட்டப்பட்டது. இல்லாத குற்றங்களுக் காக இடதுசாரித் தலைவர்களை சிறையில் அடைக்கும் உலக வழக்கம் இங்கும் அரங்கேறியது.

தண்டனை வழங்கிய  நீதிபதிக்குப் பரிசு

லூலா மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இருப்பினும், நீதிபதி செர்ஜியோ  மோரோ ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்ட னை விதித்தார். இதற்கு பரிசாக போல்சானா ரோ இந்த நீதிபதியை நீதித்துறை அமைச்சராக்கி னார். லூலாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடுவதிலிருந்து விலக்குவதே இதன் நோக்க மாக இருந்தது. மேல்முறையீட்டுக்கான அனைத்து வழிகளும் தீர்ந்த பின்னரே ஒருவரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற  உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து லூலா விடுவிக்கப்பட்டார். 580 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு,  தெற்கு பிரேசிலில் உள்ள காவல் தலைமை யகமான குரிடிபாவில் உள்ள கட்டிடத்தி லிருந்து லூலா வெளியே வந்தார், அங்கு கூடிய மக்கள் கடல் ‘சுதந்திர லூலா’ என்று ஆர்ப்பரித்து முழக்கமிட்டது. லூலா சிறையில் அடைக்கப் பட்டதிலிருந்து, அவரது ஆதரவாளர்கள் சிறை  வளாகத்தை விட்டு வெளியே வரவில்லை. வெறுப்பு என்ற விஷமில்லாமல், அன்பின்  செய்தியுடன் சிறையிலிருந்து விடைபெறுவ தாக பிரேசில் நாட்டு மக்களிடம் உணர்வுப்பூர்வ மான உரை நிகழ்த்தினார்.

மாற்றத்தை அகற்ற முயற்சி

“அரசு ஒரு நபரை அல்ல ஒரு மாற்றத்தை  அகற்ற முயற்சித்தது’. பிரேசிலின் நிலைமை சீரடையவில்லை, மாறாக மோசமாகி வருகிறது. பசியும் வேலையின்மையும் அதிகரித்துள்ளன.’ என்று அவரை வரவேற்கக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவா ளர்களிடம் லூலா உரையாற்றினார். லூலாவை 19 மாதங்கள் சிறையில் அடைத் தது நியாயமற்றது என்று பிரேசில் மக்களும் சர்வதேச சமூகமும் விவாதித்து வரும் வேளை யில் இந்த ஆண்டு தேர்தல் வந்துள்ளது. 21.59  கோடி மக்கள் தொகையில் 15.64 கோடி வாக்கா ளர்கள் இம்முறை வாக்குச் சாவடிக்குச் செல்லவுள்ளனர். இதில் 8.23 கோடி பெண்  வாக்காளர்கள். 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம்.

பிரேசில் லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடு, உலகின் ஐந்தாவது பெரிய நாடு. பிரேசில் தென் அமெரிக்க கண்டத்தின் பாதி  அளவு. பிரேசில் அர்ஜெண்டினா, பொலிவியா, கொலம்பியா, பிரெஞ்சு கயானா, பராகுவே, சுரினாம், உருகுவே மற்றும் வெனிசுலாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பிரேசில். பிரேசிலிய நிலப்பரப்பின் மிகப்பெரிய அம்சம் அமேசான் மழைக்காடு. அமேசான் மழைக்காடுகள் பூமியில் உள்ள மொத்த மழைக்காடுகளில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது. அட்லா ண்டிக் பெருங்கடல் பிரேசிலின் கிழக்குப் பகுதி யில் 7367 கி.மீ நீள்கிறது. பிரேசில் உலகின் மிகப் பெரிய கத்தோலிக்க நாடாகவும் உள்ளது. லத்தீன் அமெரிக்காவில் போர்த்துக்கீசிய மொழி பேசும் மக்கள் பிரேசிலியர்கள் மட்டுமே. இதற்குக் காரணம் போர்ச்சுக்கலின் நீண்ட கால காலனி ஆட்சிதான். அமேசான் நதிப்  படுகையில் செழிப்பாக வளர்ந்திருந்த பிரேசில் மரங்களைப் பார்க்க வந்த ஐரோப்பியர்களின் படையெடுப்பால் அந்நாட்டுக்கு பிரேசில் என்ற பெயர் வந்தது. பிரேசில் அதிக காப்பியை உற்பத்தி செய்வதால் ‘உலகின் காப்பி கிண்ணம்’ என்று செல்லப்பெயர் பெற்றது. பிரேசில் 1500 ஏப்ரல் 22, இல் பெத்ரோ அல்வாரெஸ் கப்ரால் என்ற போர்த்துகீசிய மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டது.

பன்முகத் தன்மை - சம்பா இசை

ஜனாதிபதி தேசத்திற்கும் அரசாங்கத்திற்கும் தலைவர். பிரேசில் 26  மாநிலங்களையும் ஒரு கூட்டாட்சி மாவட்டத்தை யும் கொண்டுள்ளது. அரசின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள். தேசிய காங்கிரஸ் எனப்படும் நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டதாகும். 81 இடங்களைக் கொண்ட ஃபெடரல் செனட் மேலவையாகவும், 513 இடங்களைக் கொண்ட சேம்பர் ஆஃப் டெப்யூடீஸ் கீழ் சபையாகவும் உள்ளது. நவீன பிரேசிலிய கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதாகும். மொழி, இலக்கியம், இசை, திருவிழாக்கள், பண்டிகை, உணவு பிரேசிலிய கலாச்சாரத்தின் செழுமையாகும். சம்பா என்பது ஆப்பிரிக்க மரபுகளில் வேர்களைக் கொண்ட பிரேசிலிய இசை. பட்டினியால் வாடு பவர்களிடையே பரவியிருக்கும் இந்த தாள  இசை, ஆப்பிரிக்காவில் உள்ளதைப் போலவே லத்தீன் அமெரிக்காவிலும் பிரபலம். பிரேசிலின் உண்மையான போதை கால்பந்து. பிரேசில் ஒரு கால்பந்து நாடு என்று  உலகம் முழுவதும் அறியப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பிரேசிலி யர்கள் தொழில்முறை கால்பந்து விளையாடு கின்றனர். பிரேசிலின் எந்தத் தெருவிலும் குழந்தைகள் பந்தை உருட்டுவதைப் பார்க்க லாம். உலகக் கோப்பையில் பிரேசில் விளை யாடும் போது, அந்த நாடு அதிர்கிறது. தொழி லாளிகள் வேலையை நிறுத்திவிட்டு விளை யாட்டு போதையில் மூழ்கிவிடுகின்றனர். தெரு வில் கால்பந்து விளையாடி, பின்னர் உலகின் தலைசிறந்த வீரர்களாக உருவெடுத்த அரை பட்டினி மக்கள்தான் பலர். பேலா மட்டுமல்ல, ரொனால்டோ, ரொனால்டினோ, ரொமாரியோ உள்ளிட்ட பலரும் இப்படி வந்தவர்கள்தான்.

உலகளாவிய நிதி நெருக்கடி பிரேசிலின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 2003 முதல் 2010 வரை பிரேசில் ஜனாதிபதியாக இருந்தபோது, லூலாவின் மக்கள் நலச் செயல்பாடுகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. தொடர்ந்து வந்த போல்சானாரோ ஊழல் மற்றும் சர்வாதி காரத்தின் உருவகம். எவ்வாறாயினும், எதிர் வரும் தேர்தலில் ஊழலின் கோட்டையை மக்கள் பலம் தகர்த்துவிடும் என லூலா டி சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார். எகிப்திய புரா ணக் கதையில் வரும் பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து எழுந்ததைப் போல, லூலாவின் தலைமையில் பிரேசிலின் புதிய எழுச்சிக்காக உலக மக்கள் காத்திருக்கிறார்கள்.

நன்றி தேசாபிமானி 
தமிழில் : சி.முருகேசன்