துருக்கி நாடு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 60% பணவீக்கம் என்ற நிலை. ஐரோப்பாவிலேயே மிகக் குறைந்த கூலி துருக்கி யில் உள்ளது. துருக்கியில் ஆட்டோ தொழிலாளர், கல்வி துறை தொழிலாளர் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். 2021 நவம்பரில் சுகா தாரப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தெருக்களில் இறங்கி வெள்ளைக் கோட்டு அணிந்து பேரணி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அங்காரா நகரிலிருந்து தலைநகரம் இஸ்தான்புல் வரை பேரணி நடத்தினர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் பணியாளர்களும் பாதிக் கப்படுகின்றனர். '
அத்தியாவசிய சேவை என அரசு பாராட்டினாலும் அத்தோடு அவர்களை அவர் களின் கோரிக்கைகளை மறந்து விடுகிறது. துருக்கி யில் சுகாதார பணியாளர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்த அரசு நாடாளு மன்றத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் மர்மமான முறையில் மசோதாவை எதிர்பாராத வகையில் வாபஸ் பெற்றது. இத னால் கோபமுற்ற சுகாதாரப் பணியாளர் வேலை நிறுத்தம் செய்தனர். உலகம் முழுவதும் தடுப்பூசி, தடுப்பூசி செலுத்துவதில் பாரபட்சமான நிலைமை கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் உயிரை பணயம் வைத்து சிகிச்சையில் ஈடுபடும் பணியாளர் நிலைமை குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வில்லை. துருக்கி ஜனாதிபதி எர்டோசன் மேற்கத் திய நாடுகளின் அரசியல்வாதிகளைப் போல், மனி தர்களுக்கு சமூக நோய் கூட்டு எதிர்ப்பு சக்தி உரு வாகும் என கருதுகிறார்.
அதனால் முன் களப்பணி யாளர் குறித்து அக்கறை செலுத்த மறுக்கிறார். துருக்கியில் மட்டும் 500 முன் களப்பணியாளர்கள் இறந்துவிட்டனர். இந்தியாவிலும் ஆஷா தொழி லாளிகள் ஆகிய பெண்கள் கொரோனா துவக் கத்தில் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்த னர். இவர்கள் தொழிலாளிகளாக கருதப்படு வதில்லை. ஊதியம் என்பதற்கு பதிலாக கௌரவ ஊதியம் என சிறுதொகை இவர்களுக்கு வழங்கப் படுகிறது. முறையான கையுறை கிளவுஸ் வழங்கு வதற்கு பதிலாக பிளாஸ்டிக் உறை வழங்கப் பட்டது. முறையான முக கவசம் மாஸ்க் வழங்கு வதற்கு பதிலாக பெண்கள் தங்கள் சேலை துப்பட்டா கொண்டு முகத்தை மறைத்துக் கொள்ள நிர்ப்பந் திக்கப்பட்டனர்.ஆஷா தொழிலாளருக்கும் கொரோனா தொற்றியது என்பது நினைவு கூரத்தக்கது.