வாஷிங்டன், ஜூன் 13- 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் குழந்தைத் தொழிலாளர்கள் சட்டங்களை மீறி, அவர்களை பணியில் அமர்த்துவது 69 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அமெரிக்க தொழிலாளர் துறை அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டிருக்கிறது. ஜூன் 12 ஆம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப் பட்டது. அந்நாளில் அமெரிக்கா வில் உள்ள அவல நிலை பற்றி சமூக அமைப்புகளும், சமூக ஆர் வலர்களும் கடும் கண்ட னத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகம் பற்றி பிற நாடுகளுக்குப் பாடம் எடுக்கும் அமெரிக்கா, தனது செயல்பாடுகளில் அவற்றைக் காட்டுவதில்லை. குழந்தைத் தொழி லாளர் முறைக்கு எதிரான நட வடிக்கைகளிலும் அப்படித்தான் நடந்து கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமை என்ற சாசனத்தை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள் ள்ளன. அந்த சாசனத்தை இதுவரை யில் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது அமெரிக்கா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற நாடுகள் அனைத்தும் தங்கள் நாடாளுமன்றங் களில் வைத்து, விவாதித்து, அங்கீ கரித்துள்ளன. குழந்தைகள் பாது காப்பில் இந்த சாசனத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் மிக முக்கிய மானவையாகும். ஒட்டுமொத்த உல கமும் ஒருமித்த பாதையில் பய ணிக்க உதவும் இந்த சாசனத்தை அமெரிக்கா இதுவரையில் கண்டு கொள்ளவில்லை.
விவசாயத்துறையில் அதிக மான அளவு குழந்தைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. சுமார் 5 லட்சம் குழந்தைகள் வேலை செய்கின்றன. இவ்வாறு வேலை செய்யும் குழந்தைகளில் பலர் எட்டு வயதில் இருந்தே பணியில் இருக் கிறார்கள். ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல், கிட்டத்தட்ட வாரத்திற்கு 72 மணி நேரம் அவர்களி டம் வேலை வாங்கப்படுகிறது. ஒவ் வொரு ஆண்டும் பணியில் இருக்கும் போது காயத்திற்கு உள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருக்கிறது. குவாதிமாலாவைச் சேர்ந்த குழந்தைகள் கறி வகைகளை பெரிய பெரிய பொட்டலங்களாகப் போடும் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள். சுமார் 11 அமெரிக்க மாகாணங்களில் இருந்து இந்தக் குழந்தைகள் அமர்த்தப் பட்டுள்ளனர். மத்திய அரசின் துறை சார்ந்த ஆய்வில்தான் இந்தத் தக வல் வெளியாகியுள்ளது. மேலும், இத்தகைய சட்டவிரோத நட வடிக்கைகள் தொடர்வதால், சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடந்துள்ளன. மதுவை கூடங்களில் விநியோகிக்கும் பணி களில் அவர்களை அமர்த்தலாம் என்று கூறும் சட்டங்கள் சில மாகாணங்களில் முன்மொழியப் பட்டிருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்து மாகாணங் களில் இத்தகைய மசோதாக்கள் பரிசீலிக்கப்பட்டன. கடுமையான எதிர்விளைவு களை குழந்தைத் தொழிலாளர் முறை உருவாக்கும் என்று குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு கூட்டமைப்பின் இயக்குநரான ரெய்டு மாகி தெரிவித்துள் ளார். மேலும் பேசிய அவர், குழந்தை களைத் தொழிலாளர்களாக அமர்த்திக் கொண்டு, நாட்டில் தொழிலாளர்களுக்கு தட்டுப் பாடுள்ளதால்தான் இதைச் செய்தோம் என்றெல்லாம் பேச முடியாது என்று குறிப்பிட்டார். அமெரிக்க அரசின் சட்டங்களும் தெளிவாக இல்லாததால், மீறல்கள் பெரிய அளவில் நடக்கின்றன. சிறிய அளவிலான விவசாய நிலங்களில் உழைப்பவர்களுக்குக் குறைந்த பட்ச வயது நிர்ணயிக்கப்பட வில்லை.
எங்கள் குழந்தைகள் அல்ல
குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஒரு வினோதமான கருத்தையும் அமெரிக்க நிர்வாகம் முன்வைத்தது. குழந்தைத் தொழி லாளர்கள் குறித்து பலரும் கண்ட னம் தெரிவித்தபோது, பணியில் அமர்த்தப்பட்டுள்ள குழந்தைகள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் புலம் பெயர்ந்து வந்த குழந்தைகள் என்றும் சமாளிக்க முயன்றுள்ளது. இந்த வாதத்தை சமூக ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. யாராக இருந்தாலும், குழந்தைப் பருவத்தில் பணியில் அமர்த்துவது மனித குல விரோதம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.