பாலி, ஏப். 1- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்ட மைப்பு(ஆசியான்) உறுப்பு நாடுகளின் நிதிய மைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில், அமெரிக்க டாலர், யூரோ, யென் மற்றும் பவுண்டு ஆகிய நாணயங்களை நிதிப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திட வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஆசியான் அமைப்பில் புருனேய், கம்போடி யா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய் லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. சர்வதேச நிதியத்தின்(ஐ.எம்.எப்) கணக்குப்படி, இந்த நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற் பத்தியின் மதிப்பு 3.9 டிரில்லியன் அமெரிக்க டால ரைத் தாண்டுகிறது. இந்த நாடுகளின் அமைச்சர் கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்து கொண்ட கூட்டம் இந்தோனேசியாவில் நடை பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூர் நாணயங்களைக் கொண்டே நிதிப் பரிமாற்றங்களை செய்ய வேண் டும் என்றும், அமெரிக்க டாலர், யூரோ, யென் மற்றும் பிரிட்டனின் பவுண்டு ஆகிய நாணயங் களைப் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றும் விவாதித்திருக்கி றார்கள். கடந்த நவம்பர் மாதத்திலேயே, இந்தோ னேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அவரவர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான உடன் பாட்டை எட்டின. இந்தக் கூட்டத்தில் பேசிய இந்தோனேசி யாவின் ஜனாதிபதி விடோடோ, “உள்ளூர் கடன் அட்டைகளை நாம் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். வெளிநாட்டு நிதிப்பரிமாற்ற அமைப்பு களைத் தவிர்க்கலாம். உக்ரைன் சச்சரவைக் காட்டி ரஷ்யாவின் நிதித்துறை மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலை மைகளைச் சமாளிக்க நமது நாடுகளுக்குப் பாது காப்பு வளையம் தேவைப்படுகிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், “மேற்கத்திய நிதிப் பரிமாற்ற அமைப்புகளிடம் இருந்து விலகிச் செல்ல வேண்டியது தேவையாகி விட்டது. ஒரு வேளை பிராந்திய அரசியல் விளைவுகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் இதைச் செய்தாக வேண்டும். நாம் மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். ரஷ்யா மீது அமெரிக்கா போட்ட தடைகளை நாம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும். விசா மற்றும் மாஸ்டர் கார்டு போன்றவை பிரச்சனைகளாக மாறலாம்” என்று குறிப்பிட்டார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரிய பொரு ளாதாரமான பிரேசில், சீனாவுடன் ஒரு உடன் பாட்டை எட்டியிருக்கிறது. இரு நாடுகளுக்கிடை யிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின்போது அமெரிக்க டாலரை பயன்படுத்தாமல் இருக்கப் போகிறார்கள். மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பி ரிக்க நாடுகளான இராக், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் சவூதி அரேபியா போன்றவை அமெரிக்க டாலர் பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன.
பிரிக்ஸின் புதிய நாணயம்
முன்னேறி வரும் பொருளாதாரங்களான பிரிக்ஸ் நாடுகள் புதிய நாணயம் கொண்டு வரு வது பற்றிப் பேசிக் கொண்டிருப்பதாக ரஷ்ய நாடாளுமன்றத்தின் துணைத்தலைவர் அலெக்சாண்டர் பாபாகோவ் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க நகரம் டப்ளினில் நடைபெற விருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அந்தப் புதிய நாணயம் பற்றிய அறிவிப்பு வெளிவர லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் நாடு கள் உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டை யும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காட்டையும் கொண்டவையாகும்.