what-they-told

img

ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு காளைகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை,பிப்.7- ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தத்தின் படி நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. அதற்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறிய திமில்களைக் கொண்ட வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் அதிகளவில் பங்கேற்பதாக மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசா ரணைக்கு வந்தபோது,வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளை பங்கேற்க வைத்து மாட்டின்  உரிமையாளர் பரிசுகளை பெறுவது சட்ட விரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.