what-they-told

img

மகிழ்ச்சியில் திளைக்க முடியாத இந்தியா

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவுக்கு 136 ஆம் இடம் கிடைத் துள்ளது.  2022- ஆம் ஆண்டுக்கான (Globe Happiness Reflect) மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் உலக மகிழ்ச்சி தின மான மார்ச் 20 ஆம் தேதியை ஒட்டி சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப் பட்டது. இந்தப் பட்டியல் கடந்த பத்து ஆண்டு களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தப் பட்டியலை ஐ. நா. வெளியிடு கிறது. மகிழ்ச்சியான நாடு என்ற தேர்வு, தனிநபர் வருமானம், பிற மனிதர்கள் மீதான நம்பிக்கை, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. அந்தவகையில் தற்போது வெளி யாகியுள்ள 146 நாடுகள் கொண்ட பட்டிய லில் பின்லாந்து முதல் இடத்தில் உள் ளது. பின்லாந்து கடந்த ஐந்து வருட மாகவே முதலிடத்தில் உள்ளது. மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா எப்போதும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. இம்முறை வெளி யிட்ட பட்டியலில் இந்தியாவுக்கு 136 ஆம் இடம் கிடைத்துள்ளது.  “பசி ரேங்க்: 101. சுதந்திர ரேங்க்: 119. மகிழ்ச்சி தரவரிசை: 136 இடத்தில் உள்ளோம். இந்திய மக்கள் பசி, வறுமை, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் மோசமான சமூக நல்லிணக்கம் ஆகியவை மக்களின் மகிழ்ச்சியைப் பறிப்பதாக இடதுசாரிக்கட்சிகள் கூறி யுள்ளன. இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீதாராம்யெச்சூரி ட்வீட் செய் துள்ளார்  ஆனால், வெறுப்பு மற்றும் கோபம் தரவரிசையில் நாம் விரைவில் முத லிடத்தைப் பெறுவோம்” என்று காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தான் 121 ஆம் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.