what-they-told

img

பேருந்தை வழி மறித்த யானைக் கூட்டம்

ஈரோடு, ஜூலை 6- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே யானைகள் சாலையில் சென்று கொண்டிருந்தன. இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால், எரிச்சலடைந்த யானைகள் அவ்வழியாக செல்வோரை துரத்தியது. அப்போது தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை யானைக் கூட்டம் தடுத்து நிறுத்தியது. ஓட்டுநர் பின்னோக்கி அரை கிமீ தூரம் வரை பேருந்தை இயக்கினார். இதனைத்தொடர்ந்து யானையில் சாலை யிலிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

;