what-they-told

img

அம்மாவுக்காக ஒரு நாள் மட்டுமல்ல - அம்மாவின் நினைவுடன் ஒரு வாழ்நாள் கேரள முதல்வர் பினராயி விஜயன், முகநூல் பதிவு

 பெரும்பாலும் எந்த ஒரு நபரையும் போலவே எனது வாழ்க்கையில் அதிகம் செல்வாக்கு செலுத்தியவர் அம்மாதான். அப்பாவின் நோயும், முன்னதாகவே நிகழ்ந்துவிட்ட மரணமும் குடும்ப பொறுப்பை அம்மா ஏற்க வைத்தது. துணிச்சலாக அந்த பொறுப்பை அம்மா நிறைவேற்றினார். பெற்றெடுத்த 14 குழந்தைகளில் 11 பேரை இழந்த கல்யாணியின் இளைய மகனாக வளர்ந்தேன். நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அம்மா என்னை படிக்க வைத்தார். “ தோற்கும் வரை படிக்க வைக்க வேண்டும்” என்று ஆசிரியர் கூறியபோது அம்மா உறுதியுடன் துணை நின்றார்.  அம்மாவின் அருகில் இருந்து அம்மாவுக்காக புத்தகங்களை உரக்க வாசித்தேன், அதை வழக்கமாக்கிக் கொள்ள முடிந்தது.

அந்த வழக்கமே அரசியல் கல்விக்கு துணை புரிந்தது. அம்மா கொடுத்த நெஞ்சுரமே அரசியல் வாழ்வின் அடித்தளமானது. அம்மாவை சிறப்பிக்க ஒதுக்கப்பட்டுள்ள இந்த நாளும் சிந்தனையும், தம்மை சூழ்ந்துள்ள சிரமங்களை எதிர்கொள்ள போராடி வருபவர்களுக்கு ஆறுதலளிக்கும்.  மிகத்தீவிரமான நெருக்கடியின் ஊடாக நாடு சென்று கொண்டிருக்கும்போது அசாதாரண ஆற்றலுடன் போராடி முன்னேறியாக வேண்டும். நமக்கு மிக அருகில்- நமது நினைவுகளில் அன்னையர்களின் தியாகமும் துணிச்சலும் உள்ளன. உதாரணங்களை வேறெங்கும் தேட வேண்டியதில்லை. இந்த அன்னையர் தினம் அம்மாவுக்கு நன்றியுடன் சமர்ப்பிக்கப்படுகிறது. அனைத்து அன்னையருக்கும் நன்றி. தாய்மையின் உன்னத குணங்களான தியாகம், கருணை, துணிச்சலை ஆரத்தழுவி இந்த நெருக்கடிகளை கடப்போம். ஒன்றுபட்டு முன்னேறுவோம். மே 10 அன்னையர் தினம்