what-they-told

img

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற கால நீட்டிப்பா?

சென்னை, நவ. 25- சர்க்கரை அட்டையினை அரிசி அட்டை யாக மாற்றுவதற்கான காலநீட்டிப்பு வழங்கு வது குறித்து அமைச்சர் காமராஜ் தலைமை யில் தலைமைச் செயலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பொது விநியோகத்  திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றை அரிசி அட்டைகளாக மாற்ற விரும்பு வோர் அதற்கான விண்ணப்பத்தினை www.tnpds.gov.in என்ற இணைய தள முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல்  அலுவலர்கள் மற்றும் உதவி ஆணை யர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்றும் கடந்த 19ஆம் தேதி அரசு அறிவித்தது. இதற்கான காலக்கெடு 26ஆம் தேதியு டன் முடிவடையவுள்ள நிலையில், கால  நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்க ளிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. அது தொடர்பாக ஆலோசிக்கவே உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.