what-they-told

img

கோவை-சென்னைக்கு ஏ.சி. சிறப்பு ரயில்

சென்னை,ஜன.22- கோவை-சென்னைக்கு ஏ.சி. சிறப்பு ரயில் வருகிற 24 ஆம் தேதி முதல் மார்ச்  மாதம் 31 ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை-கோவை இடையே கூடுதல் ரயில் சேவை இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏ.சி. சிறப்பு ரயில் வருகிற 24 ஆம் தேதி முதல்  மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை இயக்கப்ப டும் என்று தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து அதி காலை 5 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.45  மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடை யும். சென்னையில் இருந்து மதியம் 2  மணிக்கு புறப்பட்டு இரவு கோவை சென்ற டையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ஆகிய 6 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் ஏ.சி. எக்சிகியூட்டிவ் சேர்கார் பெட்டி இரண்டு, ஏ.சி. சேர்க்கார் பெட்டி 5 மற்றும் ஜெனரேட்டருடன் கூடிய  சரக்கு பெட்டிகள் 2 என மொத்தம் 9 பெட்டி களுடன் இயக்கப்பட உள்ளது.

;