சென்னை,டிச.7- தமிழகம் மற்றும் புதுச் சேரியில் ஒரு சில இடங்க ளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையி லிருந்து வீசும் காற்றின் சாதக போக்கின் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்து டன் காணப்படும்,நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட் டம் தலைஞாயிறு பகுதியில் 6 செ.மீட்டர் மழையும், திருத் துறைப்பூண்டியில் 5 செ. மீட் டர் மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் 3 செ. மீட்டர் மழை யும் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.