கோவை, ஜன.9- கோவை உள்பட 8 மாவட்டங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவிகிதம் குறைந்துள் ளது. மாத சம்பளதாரர்கள் மற்றும் வணிகம் செய்பவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். தனி நபர்கள் வருமான வரி கணக்கு களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கோவை பந்தைய சாலையில் உள்ள வருமான வரி அலுவலகத்தின் கோவை மண்டல முதன்மை ஆணையாளரின் கட்டுப்பாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. கோவை மண்டலத்தில் முந்தைய 2020-21 ஆம் நிதி ஆண்டில் 19 லட் சத்து 24 ஆயிரத்து 321 பேர் இணையதளம் மூலம் வரு மான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர். இதில் மாத சம் பளதாரர்கள் 4 லட்சத்து 73 ஆயிரம் பேர் ஆவார்கள். ஆனால், கடந்த நிதி ஆண்டான 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 17 லட்சத்து 46 ஆயிரத்து 718 பேர் மட்டுமே வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இது முந்தைய நிதி ஆண்டை விட சுமார் 10 சதவீதம் குறைவாகும். இதில் மாத சம்பௗதாரர்கள் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஆவார் கள். கோவை மண்டலத்தில் முந்தைய நிதி ஆண்டில் வரு மான வரி வசூல் ரூ.4 ஆயிரத்து 900 கோடியாகும். ஆனால், கடந்த 2021-22 நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 700 கோடி வரி வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட குறைவு என்றாலும் வணிகம் செய்பவர்கள் வருகிற மார்ச் மாதம் வரை வரி செலுத்த கால அவகாசம் உள்ளது. எனவே, வரி வசூல் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டின் இலக்கான ரூ.5 ஆயிரத்து 500 கோடியை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகை யில், வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்பவர்கள் 90 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் இணையதளத்தில்தான் தாக்கல் செய்கின்றனர். இதனால் நேரில் வந்து கணக்கு களை தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. கோவை மண்டலத்தில் முந்தைய நிதி ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள போதி லும் வரி வசூல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படும் என்று தெரிகிறது, என்றனர்.