what-they-told

img

அக்னிப் பெண் கல்பனா!

கம்யூனிஸ்ட் குடும்பங்களில் கல்பனா என்ற பெயர் பரவலாக பெண் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும். யார் இந்த கல்பனா? இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியான சிட்டகாங் ஆயுதக்  கிடங்கு தாக்குதலில் ஈடுபட்ட வங்காள வீராங்கனை தான் கல்பனா தத்தா. ஜூலை 27இல் இன்றைய வங்கதேசத்தின் சிட்டகாங்கில் பிறந்தவர் மாவீரர் சூர்யாசென், பிரித்திலதா, பினாசென் போன்றோருடன் 1930 -இல் அந்த தாக்குதல் நடந்தது. தாக்குதலுக்காக உளவு பார்த்த போது  கல்பனா கைதானார். பின்னர் ஜாமீனில்வெளிவந்தார். 1933 பிப்ரவரியில் சூர்யா சென் கைது செய்யப்பட்ட போது கல்பனா கைதாகாமல் தப்பித்தார். ஆனால் மே-யில் கைதாகி சிறை சென்று 1939இல் விடுதலையானார். 1940இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பெண்கள், விவசாயிகளை அணி திரட்டுவதில் முன்னின்றார். 1943 வங்கப் பஞ்சத்தின் போதும் 1947 நாட்டு பிரிவினையின் போதும் தீவிரமாகச் செயல்பட்டார். கட்சியின் பொதுச் செயலாளரான பி.சி.ஜோஷியை மணம் செய்து கொண்டார். 1995 பிப்ரவரி 8இல் காலமானார். அவரது சுயசரிதை கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி அனைவரும் படிக்கவேண்டிய நூலாகும். சூர்யா சென்னால் அக்னிப் பெண் என அழைக்கப்பட்ட “கல்பனா” என்றென்றும் எழுச்சியூட்டுவார்.