what-they-told

img

ஆதார் - பான் எண்களை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்

புதுதில்லி, டிச. 16- ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க இம்மாதம் 31ம் தேதிதான் கடைசி நாளாகும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை நிரந்தர வருமான வரி கணக்கு எண்ணான பான் எண்ணு டன் இணைப்பதை மத்திய அரசு கட்டாய மாக்கியது. கடந்த செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஆதாருடன் பான் இணைப்பது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.  பின்னர் இது 3 மாதகாலத்திற்கு நீட்டி க்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதியுடன் 3 மாத அவகாசம் முடிவடை வதால் அந்த தேதிக்குள் பான்-ஆதார் எண்களை இணைப்பது கட்டாயம் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.