நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் கோரிக்கை
பெண் குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களுடைய எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்துவதன் மூலமே பெண் கருக்கொலை, சிசுக்கொலையை தடுக்க முடியும்.
மதுரை, மார்ச் 9- தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டம் நீர்த்துப்போனதால் மீண்டும் பெண் சிசிக்கொலை தலைதூக்கு கிறது. இதைத் தடுக்க மதுரை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நட வடிக்கை எடுக்க வேண்டுமென அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் க.பிரேம லதா, செயலாளர் செ.முத்துராணி ஆகி யோர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- மதுரை செல்லம்பட்டி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 31 நாட்கள் ஆன நிலையில் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து பெற்றவர்களே கொலை செய்து புதைத்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
பெண் குழந்தை என்றாலே சுமை, பாதுகாக்க முடியாது. குடும்ப வாரிசாக ஆண் தான் இருக்க முடியும் என்ற மனோபாவம் சமூகத்தில் நிரந்தரமாக நிலவி வருகிறது. பெண் குழந்தைகள் மீது வெறுப்பு மன நிலையும் அதி கரித்து வருகிறது. கடந்த காலங்களில் மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடந்தபோது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களால் தமிழக அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தை கொண்டு வந்தது. தொட்டில் குழந்தை திட்டம் செயல்பாட்டிலிருந்தாலும் அரசு தொடர் கவனம் செலுத்தாத தால் திட்டம் நீர்த்துப் போய் விட்டது. இதனால் மீண்டும் பெண் சிசுக் கொலை நடக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசு பெண் சிசுக்கொலை, கருக்கொலைகளை தடுப்பதற்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மேற்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளைப் பாது காத்து அவர்களுடைய எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்துவதன் மூலமே பெண் கருக்கொலை, சிசுக்கொலை யை தடுக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.