what-they-told

img

வெளிநாடுகளில் வசிப்போர் 100 நாள் வேலையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு

மதுரை, மார்ச் 9-  கூட்டுறவு வங்கி ஊழியர்கள், வெளி நாடுகளில் வேலை செய்பவர்கள் பெயரை  100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து  ஊராட்சி நிதி முறைகேடு செய்த கண்ட தேவி ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, கண்டதேவி ஊராட்சியைச் சேர்ந்த  கருப்பையா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். அதில், “சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை தாலுகா, கண்டதேவி ஊராட்சி யின் இரண்டாவது வார்டு உறுப்பினராக உள்ளேன். ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்  கீழ் பல்வேறு நபர்களுக்கு வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊராட்சித்  தலைவரின் கணவர் பெயர், அவரது  தாயார் உடன்பிறந்தவர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் போன்றவர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் வேலை பார்த்து வரும் நபர்களின் பெயர்களிலும் அட்டை கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வேலை செய்ததாக பொய்யாக கணக்குக் காண்பித்து ஊராட்சிக்கு சொந்த மான ஏராளமான நிதி மோசடி செய்யப் பட்டுள்ளது. இதே போல ஊராட்சித் தலைவர் களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு  திட்டத்தில் இலவச வீடுகளுக்கும் பரிந் துரை செய்து சட்ட விதிமுறைகளுக்கு மாறாக வீடுகள் கட்டி வருகின்றனர். இந்த  முறைகேடுகள் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையாக விசாரிக்க வில்லை.   எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தில்  மோசடி செய்து வரும் கண்டதேவி ஊராட்சித் தலைவர் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”  என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு வியாழனன்று  விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனு தாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மனுதாரரின் கோரிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகுதியின் அடிப்படையில் சம்  பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி  விசாரித்து 12 வாரத்தில் சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.