‘‘அப்படி கஷ்டமா என்னதான் கேள்வி கள் கேட்டாங்க அபிஷேக்? இவ்வ ளவு டென்ஷனாகிறே?’’ என்று கேள்விகேட்ட தாத்தாவை முறைத்துக் கொண்டே காரில் அமர்ந்தான் அபிஷேக். ‘‘தாத்தா இதெல்லாம் உங்களுக்குப் புரி யாது, எல்லாக் கேள்விகளும் அவுட் ஆப் சிலபஸ். அப்பறம் எதுக்கு சிலபஸ்னு ஒண்ணு கொடுக்கணும். இடியட்ஸ்.’’ என்றான். ‘‘அப்படி என்னதான் கேள்விகள் கேட்டாங்க, சொல்லேன்.’’ என்றார் தாத்தா சடகோபன். ‘‘கேள்விகள் மெச்சூர்டா இருந்தாக்கூட பரவாயில்ல தாத்தா, எல்லாம் குழந்தைத்தன மான கேள்விகள்.’’ ‘‘அப்படின்னா?’’ ‘‘8 x 12 = ?’’ ‘‘இது உண்மையிலேயே குழந்தைத்தன மான கேள்விதான். 8 x 12 = 96. அதுதானே எழுதினே?’’ ‘‘95ஐ டிக் பண்ணினதா ஞாபகம்.’’ ‘‘ஏன் கண்ணு இதுகூடவா உனக்கு தெரி யாது? கணக்குக்கு அடிப்படை வாய்ப்பாடு தானே?’’ என்றார் தாத்தா. ‘‘தாத்தா, சிஸ்டத்துல இதைப்போட்டா டக்குன்னு விடை வந்துடப்போவுது. எட்டு டிஜிட் பத்து டிஜிட் கணக்கெல்லாம் சிஸ்டத் துல ஒரு செகண்ட்ல விடை வந்துடுது. நான் என்ன ஐந்தாம் கிளாஸ் பையனா இன்னும் வாய்ப்பாடு சொல்றதுக்கு?’’ என்றான். ‘‘கண்ணு இது அடிப்படை. இது இல்லாம நீ எந்த...’’ என்றவரை இடைமறித்தான் அபிஷேக். ‘‘நீங்க சொல்றது ஓகே தாத்தா. இந்த கம் பெனில எனக்கு கொடுக்கப்போற வேலைக் கும் இந்தக் கேள்விக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னோட வேலையில நான் எந்த அளவுக்கு ஸ்டாங்கா இருக்கேன்னு தான் அவங்க பாக்கணும்.’’ அபிஷேக் சொன்ன பதிலில் தாத்தாவுக்கு உடன்பாடில்லை என்றபோதும் இந்த நேரத் தில் அவனிடம் தர்க்கம் செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டு, ‘‘சரி வேற என்ன கேள்வி கேட்டாங்க?’’ என்றார். ‘‘பாலின் நிறம் என்ன?’’ ‘‘நீ என்ன டிக் பண்ணே?’’ ‘‘வெளிர் மஞ்சள்.’’ ‘‘வேற பதில்கள் என்ன இருந்தது அதுல?’’ ‘‘சிகப்பு, வெள்ளை, பச்சை.’’ ‘‘வெள்ளையை ஏன் டிக் பண்ணல?’’ ‘‘டவுட்டா இருந்தது தாத்தா. அம்மா எப்பவுமே பால்கலக்கும்போது பார்த்த தில்லே ஏதோ ஒரு கலர்ல கொடுப்பாங்க.’’ இப்போது தாத்தாவுக்கு மெல்ல டென்ஷன் ஏறியது. அதை அடக்கிக்கொண்டு ‘‘சரி வேற என்ன கேள்வி கேட்டாங்க?’’ ‘‘ஸ்பைடருக்கு எத்தனை கால்கள்?’’ ‘‘ஸ்பைடர்னா.. சிலந்தி.. எட்டுக்கால் பூச்சிதானே’’ ‘‘என்னது எட்டுக்கால் பூச்சியா அது, நான் ஏழுலதான் டிக் பண்ணேன்.’’ என்றான். அதற்குள் வீடு வந்துவிட, தாத்தா சட கோபன் மடமடவென்று காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று சமையலறையில் இருந்த தன்னுடைய மகளைப் பார்த்து, ‘‘என்ன வளர்ப்பு உன் வளர்ப்பு? அடிப்படை விஷ யங்கள் கூட சொல்லிக்கொடுக்காம பிரிட்ஜில் வச்ச ஆப்பிள் மாதிரி புள்ளைய வளர்த்தி ருக்க’’ என்றார். ‘‘என்னப்பா என்ன ஆச்சு?’’ என்றவள் இண்டர்வியூவில் அப்பா நடந்ததைச் சொல்லக்கேட்டு, ‘‘இந்தியாவுலயே பெரிய தனியார் கம்பெனியாம் அது. அதுல வேலைக்கு சேரணும்னுதான் மூணுவருஷமா புஸ்தகமும் கையா இருந்தான். இதுக்குன்னு செலவு செஞ்ச ரெண்டரை லட்சரூபா வேஸ்டா?’’ என்று புலம்பினாள். ‘‘ரெண்டரை லட்சம் ரூபா வேற தண்ட மாப்போச்சா. உங்களை மாதிரி ஆளுங்க ளுக்காகத்தான் ஒவ்வொரு தெருவுலயும் கோச்சிங்க சென்டர், டீச்சிங் சென்டர்னு வெச்சு ஏமாத்துறானுங்க’’ என்றவர், டிவியை போட்டுவிட்டு கையில் செல்போனை எடுத்துக்கொண்டு கேம்ஸ் விளையாட ஆரம்பித்துவிட்ட அபிஷேக்கைப் பார்த்தார். ‘‘அபிஷேக் சாயங்காலம் நாம ரெண்டு பேரும் பக்கத்துல இருக்கற விளையாட்டு மைதானத்துக்கு போறோம். வீட்டுக்குள்ள கிடக்கிற இந்த டிராக்கிங் சைக்கிளிங் மிஷின்களை எல்லாம் நான் ஊருக்கு போற வரைக்கும் தொடக்கூடாது’’ என்றார். மாலை யில் பக்கத்திலிருந்த விளையாட்டு மைதா னத்துக்கு அழைத்துச்சென்று அங்கிருந்த பையன்களுடன் வாலிபால், டென்னிஸ்பால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை அபி ஷேக்குடன் சேர்ந்து விளையாடினார். அபி ஷேக்கிற்கு மூச்சு வாங்கி வியர்த்துக் கொட்டி யது. வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு இரவில் நன்றாக உறங்கினான். இரண்டு நாட்க ளுக்குப்பிறகு முகம் முன்பை விட தெளி வாக தெரிய ஆரம்பித்தது. அடுத்தநாள் தாத்தா ஊருக்கு புறப்பட ஆயத்தமானபோது அபிஷேக் ஆச்சர்யத்தில் கத்தினான், ‘‘அம்மா எனக்கு வேலை கிடைச்சு டுச்சு. இண்டர்வியூவுல நான் பாஸ் பண்ணிட் டேன் என்றான். ஹைதராபாத்துல போஸ்டிங், ஆபீஸ்ல கெஸ்ட் அவுஸ், கார்னு எல்லா வசதி யும் கொடுக்கறாங்க. சம்பளம் மாசம் ஒரு லட்ச ரூபாய்.’’ என்றான். அபிஷேக்கின் அம்மாவுக்கு மகிழ்ச்சி யாய் இருந்தது. ஆனால் தாத்தாவுக்கோ ஆச்சர்யமாக இருந்தது. அலுவலகத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் கையொப்ப மிட்டுவிட்டு வேலைக்கு சேருவதை உறுதி செய்ய அலுவலகம் கிளம்பியவனுடன் தாத்தா சடகோபனும் ஒட்டிக்கொண்டார். அப்பாயிண்ட்மெண்ட் லட்டரை கையெ ழுத்து போட்டு வாங்கிக்கொண்டு அறையி லிருந்து வெளியில் வந்த அபிஷேக் வரவேற் பறையில் தாத்தா சடகோபன் இல்லாததைக் கண்டு துணுக்குற்றான். தாத்தா எங்கே போயி ருப்பார் என்று யோசித்தவாறு ரிசப்ஷனிஸ்டி டம் கேட்டான். அவள் சி.இ.ஓ. அறையைக் காட்டினார். தாத்தா சடகோபன் கம்பெனி சி.இ.ஓ. விடம் பேசிக்கொண்டிருந்தார். ‘‘சார் தப்பா நெனக்காதீங்க. எல்லாக் கேள்விக்கும் தப்பா பதில் எழுதின ஒருத்தருக்கு எந்த அடிப்படை யில சார் வேலை கொடுக்கறீங்க.?’’ ‘‘சார் அபிஷேக்கோட தாத்தாதானே நீங்க. உக்காருங்க சார். உங்ககாலம் மாதிரி கரெக்டா தப்பான்னு பாக்கற காலம் இல்ல இது. உங்ககாலத்துல ‘அசோகர் சாலையின் இருபுறங்களிலும் எதை நட்டார்னு கேள்வி இருக்கும். பதில் தெரிஞ்சாதான் எழுத முடி யும். இன்றைய காலகட்டத்துல அந்தக் கேள்வியை கேள்வியா கேக்கக்கூடாது. பதி லாத்தான் கேக்கணும். அதனாலதான் அசோ கர் சாலையின் இரு புறங்களிலும் இதை நட்டார்னு போட்டுட்டு அதன் கீழே நாலு பதில்கள் கொடுக்கிறோம். மரம், செடி, கொடி, கொடி கம்பம்னு. இதுல எந்த பதிலை தேர்வாளர் டிக் செய்யறாரோ அது கரெக்டான ஆன்சரா இல்லாட்டியும் அதுக்கு எவ்வளவு நெருக்கத்துல இருக்குன்னு பார்த்து அவரை தேர்ந்தெடுக்கறோம். இதுக்கு பேரு ‘‘நியரஸ்ட் ஆன்ஸர்.’’ ‘‘மெரிட் அண்ட் எபிலிட்டி’’யை நிர்ணயம் பண்றதுக்கு இந்த மாதிரிதான் நாங்க டெஸ்ட் பண்றோம். ‘‘நீங்க சொல்றது புதுமையா இருக்கு சார். உங்க கணக்குபடி பார்த்தா எட்டுக்கால் பூச்சிக்கு ஏழே கால், பாலின் நிறம் வெளிர் மஞ்சள், 8 x 12 = 95 இதெல்லாம் கரெக்ட் ஆன்ஸர்னுதானே எடுத்தக்கணும்.’’ ‘‘அப்படி இல்லை சார். மெரிட் அண்ட் எபிலிட்டியை கண்டுபிடிக்கறதுக்கு இது ஒரு மெத்தட். அவ்வளவுதான்.’’ ‘‘சரி மேல சொன்ன மூணுகேள்வி களுக்கும் சரியான விடை என்னன்னு தேர்வா னவங்களுக்கு எப்படி சார் தெரியும்.’’ ‘‘அதுக்குதான் ‘ஹ்யுமன் பேசிக்ஸ்’னு புதுசா சேர்றவங்களுக்கு டிரெயினிங் கொடுக்கறமே. அதுல இதுபத்தி எல்லாத்தை யும் சொல்லித்தருவோம்.’’ ‘‘இலவசமாகவா?’’ ‘‘இலவசமா எப்படிசார் சொல்லித்தர முடியும். சம்பளத்துல மாசம் ஒரு தொகையை பிடிச்சுக்குவோம்.’’ சி.இ.ஓ. சொன்னதைக் கேட்டதும் சட கோபன் எழுந்து கொண்டார். ‘‘என்னசார் எழுந்திட்டீங்க?’’ என்ற வரை பார்த்து சடகோ பன் சொன்னார், ‘‘பணம் சம்பாதிக்க பத்தாயி ரத்து ஓராவது வழியை இன்னிக்கு நான் தெரிஞ்சுகிட்டேன் சார்”.