what-they-told

img

குறைந்த விலையில் தக்காளி விற்பனை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை, மே 20 - தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்க ளில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளி யின் விலை வெளிச் சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க, தமிழக அரசு கூட்டுற வுத் துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 2021 வடகிழக்கு பருவமழை காலத்தில், கூட்டு றவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 27.11.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1,100 மெட்ரிக் டன் அளவிற்கும் ரூ.3 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய  மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி யின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

தக்காளி கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு துறை நடத்தி வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம்  முதல் கட்டமாக 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ  ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை இன்று முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும் தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

;