சென்னை,செப்.25- நெல்லை, விருதுநகர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரி கூறிய தாவது:- வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சியானது உள் கர்நாடகா அதனை ஒட்டியுள்ள ராயலசீமா மற்றும் தெலுங்கானாவில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவ லாக லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரி, தேனி, நெல்லை, விருதுநகர், கோவை, திருப்பூர், நீல கிரி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
வெளுத்து வாங்கிய மழை
கடந்த ஜூன் மாதம் முதல் இம் மாதம் 25 ஆம் தேதி வரைக்கும் ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பா லான மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் இந்த கால காட்டத்தின் சராசரி மழை அளவு 117.6 மில்லி மீட்டராகும். ஆனால், 217.2 மி.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இது 85 விழுக்காடு அதிகமாகும். அடுத்த தாக அரியலூரில் 348.9 மி.மீட்டருக்கு 547.7 மி.மீட்டரும் பெய்துள்ளது. தேனி யில் 197.5 மி.மீட்டருக்கு 310.5 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது 57 விழுக்கா டாகும். திருவண்ணாமலையில் 54 விழுக்காடும், புதுச்சேரியில் 53, சிவ கங்கையில் 47 விழுக்காடும் மழை அதிகம் பெய்துள்ளது. நீலகிரி 38 விழுக்காடு, நாகை 35, திருவள்ளூர் 33, பெரம்பலூர் 31, குமரி 22, திருப்பூர், வேலூர் 20, சேலம், தஞ்சா வூர் 19, கடலூர் 14, விழுப்புரம் 13, தரு மபுரியில் 10 விழுக்காடும் அதிகமாக மழை பெய்திருக்கிறது. சென்னையை பொருத்தவரைக்கும் 412.5 மி. மீட்ட ருக்கு 564.4 மி.மீட்டர் மழை பெய்துள் ளது. இது 37 விழுக்காடு அதிகம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
குறைவு
அதேசமயம், திண்டுக்கல் மாவட் டத்தில் 238.2 மி.மீட்டர் மழை பெய்தி ருக்க வேண்டும். ஆனால் 210 மி. மீட்டர் மட்டுமே பெய்துள்ளது. இது 26 விழுக்காடு குறைவாகும். நாமக்க லில் 21 விழுக்காடும், கிருஷ்ணகிரி 15, மதுரை 9, தூத்துக்குடி 8, காஞ்சிபுரம் 7, திருச்சி 2 விழுக்காடும் குறைவாக பெய்திருக்கிறது.