சென்னை, செப்.21- தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டதையடுத்து, திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு நடைபெற விருந்த முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் கட்சி நிர்வாகிகளிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.