சென்னை, ஏப்.29- தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மத்திய குழுவினர் சென் னையில் 4-வது நாளாக இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர். அதன்படி, வி.திருப்புகழ், சப்தர்ஜங் ஆஸ்பத்திரி மற்றும் வி.எம்.எம்.சி. பேராசிரியர் டாக்டர் அனிதா கோகர் ஆகியோர் ஒரு குழுவாக பிரிந்து ஆய்வு மேற் கொண்டனர். அவர்களுடன் வரு வாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி. ஜகநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி ஆகி யோர் உடன் சென்றனர்.
இந்த குழுவினர், சென்னை சாந்தோமில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், சராசரியாக தினசரி எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருவார்கள்? என கேட்டறிந்த னர். மேலும், அங்கு பணிபுரிப வர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மேற்கொள் ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து சென்னை நொச்சிக்குப்பத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதி யில் உள்ள மக்களிடம் கொரோனா வைரஸ் நோய் என்றால் என்ன? அது எப்படி பரவு கிறது என்று தெரியுமா? முக கவ சம் ஏன் அணிய வேண்டும்? என கொரோனா குறித்த விழிப்பு ணர்வு அந்த மக்களிடம் இருக்கி றதா? என்பதை கேட்டறிந்தார். அங்கு முக கவசம் அணியாமல் இருந்த ஒரு சிலருக்கு முக கவ சங்களையும் வழங்கினர்.
நொச்சிக்குப்பத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினரி டம் அப்பகுதி மக்கள், ரேஷன் கடை களில் வழங்கும் அரிசி மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாக புகார் கூறினர். அதைத் தொடர்ந்து, பால வாக்கத்தில் உள்ள விஷ்ராந்தி ஆதரவற்ற பெண்கள் முதியோர் இல்லத்தை ஆய்வு செய்தனர். அங்கு முதியோர்களுக்கு வழங் கப்படும் கொரோனா தடுப்பு நட வடிக்கைகள் குறித்து கேட்டறிந்த துடன், சமூக இடைவெளியை எவ்வாறு கடைபிடிக்கிறீர்கள் என்றும் கேட்டனர்.
அதைத் தொடர்ந்து சென் னையை அடுத்துள்ள ஒக்கியம் துரைப்பாக்கம், அன்னை இந்திரா நகரில் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘ஏர் லிக்யூடு’ என்ற பன்னாட்டு ‘வெண்டி லேட்டர்’ தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்தனர். இதே போன்று, என்.ஐ.டி.எம். பேராசிரியர் சூரியபிரகாஷ், இந்திய உணவுக்கழகத்தின் தலைமைப் பொது மேலாளர் லோகேந்தர் சிங், மத்திய சுகாதா ரம் மற்றும் குடும்ப நலத்துறை யின் முதன்மை செயல் அலுவலர் (ஐ.வி.சி.) டாக்டர் வி.விஜயன் ஆகியோர் கொண்ட குழுவினர் வரதராஜபுரம் குடிசைமாற்று வாரிய பகுதிகளிலும், புதுப் பேட்டையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும், சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றி லும், தனியார் மருந்தகம் ஒன்றி லும் ஆய்வு பணிகளை மேற் கொண்டனர்.
பின்னர், வி.திருப்புகழ் தலை மையிலான மத்திய குழுவினர் சென்னை டி.ஜி.பி. அலுவல கத்தில் கொரோனா தடுப்பு பணி களுக்காக செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்ததுடன், தமிழக டி.ஜி.பி. ஜெ.கே.திரிபாதியை சந்தித்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு எப்படி அமல்படுத்தப்படுகிறது? என்பது போன்று விவரங்களை கேட்டறிந்தனர். மேலும், கொரோனா பாதிக் கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை எவ்வாறு கண் காணிக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையானது சுகாதாரத் துறையு டன் எந்த அளவிற்கு இணைந்து செயல்படுகிறது என்பது குறித் தும் கேட்டறிந்தனர்.