சென்னை,மார்ச் 18- மார்ச் 31ஆம் தேதி வரை புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் பேருந்துகளில் பயணிக்கும் இரண்டரை கோடி பயணி களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம் என்றார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும். பய ணத்தைத் தவிர்த்தாலே தொற்று ஏற்படுவதை தடுக்கமுடியும். 5 லட்சம் முகக்கவசங்கள் மருத்துவமனைகளில் தயாராக உள்ளது. 25 லட்சம் முகக்கவசங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.