what-they-told

img

சேவூரில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

அவிநாசி, செப்.23 -  சேவூரில் பனியன் வேஸ்ட் குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட  திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றி லும் எரிந்து சேதமானது. சேவூர் - புளியம்பட்டி சாலையில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பனியன் வேஸ்ட் குடோன் உள்ளது. இங்கு வியா ழக்கிழமை நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீஸார், அவி நாசி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து வர வழைத்தனர். அவர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி  தீயை அணைத்தனர். எனினும் உள்ளிருந்த இயந்திரங்கள்,  பனியன் வேஸ்ட் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து சேவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

;