what-they-told

img

போலீசார்தான் எங்களை வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்தார்கள்

மணிப்பூரில் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவருக்கு 20 வயது. மற்றொருவருக்கு 40 வயது. இதில், பாதிக்கப்பட்ட இளம்பெண் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பட்டப்பகலில் தாங்கள் கொடூரமான முறையில் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்தை ஒரு கும்பல் தாக்கியபோது, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக காட்டிற்குச் சென்றதாகவும், அப்போது, தௌபல் போலீசார் தங்களை மீட்டுக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி, காவல்நிலையத்திற்கு 2 கி.மீ. முன்னதாக  நடுரோட்டில் இறக்கிவிட்டு, வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்ததாகவும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

“எங்கள் கிராமத்தைத் தாக்கும் கும்பலுடன் போலீசாரும் இருந்தனர். வீட்டுக்கு அருகிலிருந்து எங்களை சிறிது தூரத்திற்கு அழைத்துச் சென்று, கும்பலுடன் எங்களை சாலையில் விட்டுச் சென்றனர். நாங்கள் போலீசார் மூலமாகவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.