மதுரை, மே 12- குழந்தைகள் பாதுகாப்புச் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கு களின் விசாரணையை தொடர்ந்து பின் பற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக என தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறியுள்ளார் இந்த வாரம் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உயர் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்திற்குப் பிறகு தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ராகார்க் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு இந்த ஆண்டு திருநெல்வேலி மண்ட லத்தில் 169 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைத்தது மட்டு மின்றி, 2,256 சமூக விரோதிகளிடம் இருந்தும் காவல்துறையினர் நன்னடத்தைப் பத்திரம் பெற்றுள்ளனர். இந்த உறுதிமொழியை மீறுபவர்கள் உடனடியாகக் கைது செய் யப்படுவார்கள். இந்த ஆண்டு 3,299 ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என கார்க் தெரிவித்துள்ர் கஞ்சா மற்றும் அதன் கடத்தல்காரர்க ளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக ளைப் பொறுத்தமட்டில் திருநெல்வேலி மண்டலத்தில் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 59.01 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. 270 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 29 பேர் குண்டர் சட்டத்தின் அடைக்கப்பட்டுள்ள னர். 147 கஞ்சா கடத்தல்காரர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.
போக்சோ வழக்குகளை கண்காணித்தல்
குழந்தைகள் பாதுகாப்புச் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கு களின் விசாரணையை தொடர்ந்து பின் பற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களு க்கு இந்த வழக்குகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கப்படுகிறது. போக்சோ வழக்குகளின் விசார ணையை நாங்கள் உன்னிப்பாகப் பின்பற்றுவதால், குற்றம் சாட்டப்பட்ட வர்களின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வரும்போதெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்து முன் கூட்டியே தெரிவிக்கிறோம். ஜாமீன் வழங்குவதை தடுக்க பாதிக்கப்பட்ட வர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகு மாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்த நடைமுறை தெற்கு மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து 560 போக்சோ வழக்குகளுக்கும் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது,” நான்கு தென் மாவட்டங்களில் உள்ள 285 போக்சோ வழக்குகளில் இந்த முறை பின்பற்றப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 91 போக்சோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெற்றுள்ளனர். 11 போக்சோ வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 31 வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள நிலை யில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 39 போக்சோ வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்ப ளிக்கப்பட்டுள்ளது. இதில், 13 வழக்குக ளில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது என்றார் கார்க். கொலைகள் போன்ற கொடூரமான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை; குற்றவியல் விசாரணைகளை நெருக்க மாகப் பின்தொடர்வதற்காக துணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களின் பங்கேற்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 65,000 வழக்குகளில் இறுதி அறிக்கை அல்லது குற்றப்பத்திரிகை நீதி மன்றங்களில் தாக்கல் செய்யவேண்டி யுள்ளது, இறுதி அறிக்கைக அல்லது குற்றப்பத்திரிகையை கூடிய விரைவில் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச் செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீதிமன்றத் தீர்ப்புகள் அமையும்.