what-they-told

img

வெயில் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, ஏப்.15- தமிழகத்தில் இரு நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் காலை பதி னொன்றரை மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு  மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து  வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்ப நிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது என்றார். மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தரும புரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்பு ரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே தமிழகம் முழுவதும் 6  இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி தாண்டி யது.