what-they-told

img

கொரோனாவை கட்டுப்படுத்த ‘மூலிகை மருந்து’ தயார்?

 மடகாஸ்கர் தீவுகளில் கொரோனா நோய்த் தொற்றினால் 128 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழப்பு இல்லை. அங்கு காணப்படும் ஆர்டிமீஸியா என்ற தாவ ரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து கொரோனா நோயையும் அழிக்க வல்லது என்று மடகாஸ்கர் ஜனாதிபதி ஆன்ட்ரே ராஜோலினா தெரிவித்துள்ளார். இந்த மருந்து இரண்டு கொரோனா நோயாளி களை குணப்படுத்தியுள்ளதாகக் கூறி யுள்ளார்.

இந்த மருந்துக்கு கோவிட் ஆர்கா னிக்ஸ் என்று பெயரிட்டுள்ளதாகக் குறிப் பிட்ட அவர், மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த மருந்தை உருவாக்கி யுள்ளதாகக் கூறிய ஆன்ட்ரோ, டாக்டர் ஜெரோம் முனியாகி முன்முயற்சி யால் இந்த மருந்து தயாராகியுள்ளதாக வும் கூறினார். செய்தியாளர்கள் முன்னி லையில் கோவிட் ஆர்கானிக்ஸை குடித் தும் காட்டினார். இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்திலும் ஆன்ட்ரோ வெளி யிட்டுள்ளார்.