what-they-told

img

நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட அரசு உத்தரவு

சென்னை,அக்.25- நவம்பர் 1 ஆம் தேதியை,  தமிழ்நாடு நாள்., என்று  கொண்டாட நிதி ஒதுக்கி  தமிழ்நாடு அரசு, அரசா ணையை வெளியிட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் ஒன்றாம் தேதி, தனித்துவ தமிழ்நாடு உரு வாக்கப்பட்டதை, பெரு மைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து  சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் அறி விப்பை வெளியிட்டார். இதன்படி, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இனி வரும் ஒவ் வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியினை தமிழ் நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டுள் ளது. மேலும் மொழிக்காவ லர்கள், மற்றும் தமிழறிஞர்க ளையும் சிறப்பிக்கும் வண்ணம் விழா எடுத்து சிறப்  பிக்கவும் முடிவு செய்திருக்கி றது. மேலும், இளைய சமு தாயம் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் கவியரங்கங்கள், பட்டிமன்றம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுக்க ஏதுவாக, ரூ. 10 லட்சம் நிதியும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.