புதுதில்லி,மார்ச் 6- இந்தியாவில் சிலருக்கு கொ ரோனா வைரஸ் நோய் பாதிப்பை தொடர்ந்து, 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் ஏராள மானோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தில்லி, ராஜஸ் தான், உத்தரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 30 பேர் கொ ரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் சிலரைத் தனிமைப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப், சிக்கிம் மற்றும் உத்தர காண்ட் ஆகிய ஆறு மாநிலங்க ளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத் துள்ளது. மேலும் தொற்றுநோய் தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து ஆலோசனைகளை பட்டிய லிட்டுள்ளது. தொற்றுநோயை சமாளிக்க மத்திய அரசு போதுமான நடவ டிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தானும் உறுதியளித் துள்ளார். அரசாங்கம் 24/7 ஹெல்ப் லைன் எண் + 91-11-2397 8046 மற்றும் ஒரு மின்னஞ்சல் ஐடி ncov2019@gmail.com ஆகிய வற்றை வெளியிட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் இது தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெறலாம் மற்றும் எந்தவொரு கொரோனா வைரஸ் அவசர காலத்திலும் உதவி பெறலாம் எனக்கூறி உள்ளது.