சென்னை, மார்ச் 13- பொதுத்தேர்வுகளுக்கு தரம் மேம்படுத்தப்பட்ட கிழிக்க முடி யாத மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர் பெயருடன் பெற் றோர் பெயரும் அச்சிட்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் வெளி யிட்ட அறிவிப்புகள் வருமாறு: 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படும், அனைத்து வகுப்புகளுக்கான பாடநூல்கள் ஒலி வடிவில் தமிழிலும், ஆங்கி லத்திலும் இணைய தளத்தில் வெளியிடப்படும். வண்ணம் தீட்டுதல், பழைய பொருட்களை கொண்டு புதிய பொருட்களை செய்தல் போன்ற திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவில் மாணவர்களுக்கான வண்ணத்திருவிழா நடத்தப்படும். 2, 3ஆம் வகுப்புகளில் பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைதீர் கற்றல் பயிற்சிப் புத்தகம் வழங்கப்படும்.
அனைத்து நூலகங்களிலும் குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்படும். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க மாவட்டந் தோறும் 3 மாணவர்களுக்கு கேடயமும், ஊக்குவிக்கும் ஆசிரியர்க ளுக்கு கேடயமும் வழங்கப்படும். மத்திய மாநில அரசு விருது பெற்ற நூல்கள் 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்படும். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும். அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு 50க்கும் மேற்பட்ட கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். கல்லூரிகளில் கண்காணிப்பு கேமிரா உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: அனைத்து அரசு கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சிதம்பரம், ராமநாத புரம், சிவகங்கை, செய்யாறு, கடலூர் என 8 அரசு கலைக்கல்லூரி களை மேம்படுத்த தலா 2 கோடி ரூபாய் வீதம் 16 கோடி ரூபாய் செலவிடப்படும். திருவள்ளுவர் பல்கலைக் கழக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கோடி வழங்கப்படும். தொன்மை வாய்ந்த உதகமண்டலம் அரசு கலைக்கல்லூரி 8.20 கோடி ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி 2.40 கோடி செலவிலும் புணரமைக்கப்படும். தமிழ்நாடு ஆவணக்காப்பகம் 9.50 கோடி ரூபாய் செலவில் புணர மைக்கப்படும். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில 300 கணினிகளுடன் கூடிய மொழி ஆய்வகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.