சென்னை, பிப். 24- ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவருக்குமான நூல்களைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதா னத்தில் கடந்த 16ஆம் தேதி துவங்கி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு பதிப்பகத்தினருடைய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் அரங்கம் (எண். 172, 173) அமைக்கப் பட்டுள்ளது. இங்கு கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்புள்ள தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் தொல்காப்பியம், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களான திருக்குறள், நாலடியார் எட்டுத்தொகை பத்துப்பாட்டு உள்ளிட்ட 41 செவ்வியல் நூல்களையும் மொழிபெயர்த்துச் செம்பதிப்பு நூல்களாக கொண்டு வரப்பட உள்ளன. முதற்கட்ட மாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ‘இன்னா நாற்பது’, ‘நாலடியார்’, ‘திருக்குறள்’ முதலானவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.
அதேபோல் திருக்குறள் பஞ்சாபி, குஜராத்தி, மணிப்பூரி ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இறையனார் களவியல், ஐங்குறுநூறு ‘மருதம்’, ‘நெய்தல்’, ‘பாலை’, ‘குறிஞ்சி’ ஆகியவை செம்பதிப்புகளாக வெளிவந்து ள்ளன. அதேபோல் 6ஆம் நூற்றாண்டுக்கு முன்புள்ள தொல்லியல் குறித்த ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. களப்பிரர் காலம் இருண்ட காலம் என கூறப்படுவதுண்டு. ஆனால் ஆ.பத்மாவதி எழுதியுள்ள ‘புதிய நோக்கில் களப்பிரார் வரலாறு’ எனும் நூல் அது இருண்ட காலம் இல்லை என விவரிக்கிறது. இந்த நூல் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடிகளாசிரியர் எழுதிய ‘தொல்காப் பிய ஆய்வு’, ச.குருசாமி எழுதிய ‘தெய்வசி லையார் உரைநெறி’, தொல்லியல் குறித்த ஆய்வு நூல்களும் இங்குக் கிடைக்கி ன்றன. ஐராவதம் மகா தேவன் எழுதிய ‘இரணி தமிழ்’ மூன்றாவது பதிப்பு வெளி வந்துள்ளது குறிப்பி டத்தக்கது. அதேபோல் முனைவர் ஐராவதம் மகா தேவன் எழுதிய ‘சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்’, கலைஞர் மு.கருணா நிதி எழுதிய ‘செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்’, பேராசிரியர் பி.மருத நாயகம் புதிய கண்ணோட்டத்தில் எழுதிய ‘பண்டைய தமிழ் கவிதை மற்றும் கவிதை கள்’. பேராசிரியர் ஆர்.கோதண்டராமன் எழுதிய ‘தமிழ் வரையறுக்கப்பட்ட அமைப்பின் இயக்கவியல்’, மருத்துவர் டி.என்.ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ‘திரிகடுகம்’, பேராசிரியர் வி.ராமசாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘இறையானார் அகப்பொருள்’, பேராசி ரியர் அ.தாமோதரன் பதிப்பில் ‘இறை யனார் களவியல்’, பேராசிரியர் சேதுமணி மணியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘ஐந்தினை ஐம்பது’,. கே.செல்லப்பன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ‘சிலப்பதிகாரம்’, கே.ஜி.சேஷாத்ரி ஆங்கிலத்தில் மொழி பெயர்த் துள்ள ‘மணிமேகலை’ கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ‘பரிபாடல்’, ‘கலித் ்தொகை’, அகநானூறு’, ‘புறநானூறு, ‘பத்துப்பாட்டு’ போன்ற நூல்களும் கிடைக் கின்றன. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் முற்றோ தல் ஐந்து தொகுதிகள், பத்துப்பாட்டு முற்றோதல் ஐந்து தொகுதிகள், திருக்கு றள் இசைத்தமிழ் ஆறு தொகுதிகள் ஆகிய வை இசையோடு சிடி வடிவில் கிடைக்கின் றன. சங்க இலக்கிய அகழ்வாய்வு ஒப்பீடு, ஐந்திணை, மருதம், புறநானூறு, கல்லணை (தமிழ்நாடு நீர் மேலாண்மை), ஆதிச்ச நல்லூர் தாமிரபரணி நாகரிகம் ஆகியவை ஆவணப்படமாக (வீடியோ) டிவிடியில் கிடைக்கின்றன.
திருக்குறள் கடவுள் வாழ்த்து பத்துப்பாடல் மணிப்புரி நடனத் தில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப் படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய வாதிகள், சமூக ஆர்வலர்கள், சிந்தனை யாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர் கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் சங்க இலக்கிய நூல்கள் உட்பட அனைத்து நூல்களும் ஒருசேர செம்மொழித் தமி ழாய்வு மத்திய நிறுவன அரங்கில் கிடைக்கி றது. ஒன்றிய அரசு தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்து தமிழை உலகறியச் செய்யும் வகையில் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வரும் பணிகள் தற்போது நடைபெற்று வரு கின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து நூல்கள், சி.டி., டிவிடி என அனைத்திற்கும் 50 விழுக்காடு கழிவு அளிக் கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நூல்கள் அனைத்தும் உலகம் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கிண்டல், அமேசான் போன்ற நிறுவனங் ்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.