சென்னை, மே 8- கொரோனா வைரசை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா? என மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சி லுக்கு உத்தரவிடக் கோரி விழுப்பு ரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர், ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான செந்தமிழ் செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்க ளைத் தாக்கல் செய்திருந்தனர். மனுவில், கொரோனாவுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்காத நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் இந்நோ யைப் பரிபூரணமாக குணப்ப டுத்த முடியும் என்பதை நிரு பித்துக்காட்ட தயாராக இருப்ப தாகவும்,
சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், செந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகை களை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே கொரோனா உள்ளிட்ட எல்லா வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டு விடும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த போது, கொரோனாவை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்ப டுத்த முடியுமா? என்பதைக் கண்ட றிய மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்க ளின் அடிப்படையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாரா யணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜ ரான வழக்குரைஞர் வசந்தகுமார் சித்த மருத்துவத்தில் கொரோனா வைக் குணப்படுத்த கண்டறிந் துள்ள மருந்து குறித்து எடுத்து ரைத்தார். பின்னர் வழக்கு விசார ணையை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் படி கொரோனாவைக் குணப்படுத்த முடியுமா? என்பதைக் கண்டறிய மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு, விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.