what-they-told

img

தொட்டு பார்க்க அல்ல… தொடர்ந்து படிக்கவே புத்தகங்கள்!

“உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்கு பயிற்சி புத்த கம் வாசிப்பு” என்கிறார் ஆஸ்திரிய உளவியல் நோய் மருத்துவர் சிக்மண்ட் ஃபிராய்டு.  வாசிப்பு என்பது அன்றாட வாழ்விற்கு அவசியமான ஒன்றாகும். புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பதால் உலகை அறியலாம், உள்ளுர் தலைவர் முதல் உல கத்தலைவர்களின் வாழ்க்கை அறிய முடியும், தொடர் வாசிப்பால், அரசியல், அறிவியல், வரலாறு, சமூகவி யல் அனைத்தையும் பெற்ற ஞானியாக முடியும். மகாத்மா காந்தி, சி.ராஜகோபாலாச்சாரி, சர்தார் வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒவ் வொரு மனிதர்களுக்கும் பின்னால் இருப்பது புத்தக ‌வாசிப்பு என்பது மறுக்க முடியாத உண்மை. பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதி கரித்திட கோவை மாநகராட்சி நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்தி, அது தற்போது வீட்டின் வாசலுக்கே வந்து படிக்கச்சொல்கிறது. மாணவர்களின் வாசிப்பு திறனை மோம்படுத்தும் வகையில், 800 புத்தகங்க ளோடு உலா வருகிறது “உங்களை தேடி நூலகம்” என்ற வாகனம். உங்களை தேடி நூலகத்தினை மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப், கடந்த ஒன்பது மாதங்க ளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அந்த நூலகத் தில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் உள்ளன. இதில் கதைகள், கவிதைகள், உரைநடை, காப்பியங் கள், பொது அறிவு, இலக்கிய நூல்கள், சுயசரிதை, சிறு வர் கதைகள், புதினங்கள், தன்னம்பிக்கை, சுயமுன் னேற்றம் போன்ற தலைப்புகளில் ஏராளமான புத்த கங்கள் இடம்பெற்றுள்ளன. 

அட்டவணை

இந்த வாகனம் அனைத்து தரப்பு மக்களை சென் றடையும் வகையில், தனி அட்டவணை அமைத்து செயல்பட்டு வருகின்றது. காலை மற்றும் மதிய நேரங்களில் இரண்டு பள்ளிகளும், மாலை நேரங் களில் பொது இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. “உங்களை தேடி நூலகம்” வாகனம் பள்ளி மாண வர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. இத்திட்டத்தின்படி, நாள் ஒன்றுக்கு இரண்டு மாநகராட்சி பள்ளிகளுக்கு இந்த வாகனம் செல்கிறது. காலை 10 மணி முதல் 12.30 முதல் பள்ளியும் ,மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாம் பள்ளிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை பொது இடங்களுக்கும் செல்கிறது. மேலும், திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பந்தையசாலை பகுதியிலும், சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் காந்திபுரம் பேருந்து நிலை யம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று வருகிறது.

ஆர்வத்தை தூண்டுகிறது

இதுகுறித்து நூலகர் ரதி தேவி கூறுகையில், உங் களை தேடி நூலகத்தால் மாணவர்கள் முதல் முதி யவர்கள் வரை பயன்பெறுகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் புத்தகங்களை புரட்டுகின்றனர். ஒவ்வொரு மாணவர்களும் தங்களின் தனிப்பட்ட விருப் பத்தின் அடிப்படையில் கதை, கவிதை, உரைநடை,  காப்பியங்கள், பொது  அறிவு, இலக்கிய நூல்கள்,  நகைச்சுவை கதைகளை ஆர்வத்துடன் வாசிக்கின்ற னர். அதிலும், சில மாணவர் கள் தங்கள் அன்றாட வாழ்வில் தெரிந்து கொள்ளும் பாடப்புத்தகங்கள் மூலமாக திருக்குறள், உரைநடை கதைகளையும், தொலைக் காட்சி முலமாக  பொன்னிசெல்வன் போன்ற கதை களையும், பொழுதுபோக்கு மூலம் தார்மீக கதை கள், நகைச்சுவை கதைகள் போன்றவற்றையும் ஆர்வ முடன் படிக்கின்றனர். பொதுமக்கள் அதிகளவில் மருத்துவம், சமையல் போன்ற புத்தகங்களை படிக்கின்றனர். பொதுமக்களும் கூட அவர்களுடைய சொந்த புத்தகங்களை பலருக்கும் பயன்பட வேண் டும் என்ற நல்ல எண்ணத்தில் நடமாடும் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் அருகில் அமர்ந்து படிப்பதற்கு மட்டுமே. விற்பனைக்கோ, வீட்டிற்கு எடுத்து செல்லவோ அனுமதியில்லை. இந்த நூல கத்தில் கியூஆர் ஸ்கேனர் வசதியும் உள்ளது. இதன் முலம் புத்தகங்களின் பெயர்களை தெரிந்து கொள்ள லாம், என்றார். இதுதொடர்பாக இத்திட்டம் மூலம் பயன்பெற்று வரும் பொதுமக்கள் கூறுகையில், “உங்களை தேடி  நூலகம்” என்பது நல்ல ஒரு திட்டமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தை மறந்து கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற தொழில் நுட்பத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். புத்தகங்களை படிக்க இந்த நூலகம் ஒரு தூண்டுதலாக அமை கிறது. இன்னும் இதுபோன்று அதிகமான உங்களை  தேடி நூலக வாகனங்களை அரசு இயக்க வேண் டும் என்றனர். இன்றைய மாணவர்கள் மத்தியில் வாசிப்பு என்ற  சொல் கடினமாகவே உள்ளது. தமிழாக இருந்தா லும் சரி, ஆங்கிலமாக இருந்தாலும் சரி. புத்தகத்தை வாசிக்க முடியும் என்கிற மன தைரியம் இல்லாமல் பலர் உள்ளனர். காரணம் வாசிப்பு பழக்கம், பயிற்சி  இல்லாமையாகும். “தொட்டுத் தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம்; தொடர்ந்து படித்தால் அதுவே வெற்றியின் ஆயுதம்” என்பதை உணர்ந்த நம் அனை வரும் வெற்றியின் முதற்படியை உங்களை தேடி நூல கத்தில் தொடங்கி வெற்றி என்ற இலக்கை அடைய வேணடும்.

-மு.சுவேதா