கீழடியில் கண்டறிப்பட்டுள்ள பானை ஓடு களில் எழுதப்பட்டுள்ள கீறல்கள் “சாதார ணமாக பார்ப்பவர்களுக்கு அது ஒரு கோடாக, கிறுக்கலாகத் தான் தெரியும். ஆனால் “கீறல்கள்” மிகவும் ஆச்சரியப்படுமளவிற்கு மகத்துவமானவை என்கின்றனர் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள். மிக சமீபத்தில் கலையையும் ஒரு குலத்தை யும் குறிக்கும் அடையாளமாக மீன் சின்னம், கண்டறியப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழ் கல்வெட்டு களுடன் கூடிய 1,500 மற்றும் 60-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வுப் பணிகள் தொடங்கின. முதல் மூன்று கட்ட அகழா ய்வை மத்திய தொல்லியல்துறை நடத்தியது. அதற்கு பின் 4, 5, 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்றன.
முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் 7,818 தொல்லியல் எச்சங்களும், தமிழ்நாடு தொல்லி யல் துறை மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 தொல்லியல் எச்சங்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 எச்சங்களும் கிடைத்தன. ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடி யில்- 950, கொந்தகையில்- 21, மணலூர்-29, அகரம்-786 என மொத்தம் 1,786 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழைமையான ஈமக்காடான கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், மேற்கண்ட நான்கு இடங்களிலும் இதுவரை 128 கரிமப் படிமங் களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 6-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட் போன்ற விலை மதிப்பற்ற மணிகள், விலங்கு ஒன்றின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டு மானங்கள், ஒரே முதுமக்கள் தாழியில் பத்து பளபளப்பான சிவப்பு நிற பானைகள் மற்றும் கறுப்பு சிவப்பு நிற பானைகள் கிடைத்தன. தவிர மூன்று உறைக் கிணறுகள் கண்டறியப்பட்டன.
ஏழுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடு கள், மண்டை ஓடுகள், நுண் கற்காலத்தைச் சேர்ந்த மெல் அழகு கத்திகள், நுண் கருவிகள், 300 மில்லி கிராம் எடையுடைய தங்க நாணயம், கரிம மயமான நெல்மணிகள், செலடான் வகை சீன மண்பாண்ட ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கிடையில், கீழடியில் அமைய விருக்கும் அருங்காட்சியகத்தில் தமிழ்- பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல்வேறு கலைப்பொருட்கள் இடம்பெற உள்ள தாக மாநில தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) ஆர்.சிவானந்தம்தெரிவித்துள்ளார். சங்க கால மக்களின் வாழ்க்கை, அவர்களின் கல்வியறிவு, கடல் வாணிபம் ஆகியவை தனித் தனிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட உள் ளன. அகழ்வைப்பகத்தின் முதல் தளத்தில் சங்க காலத்தில் இருந்த மக்களின் உயர் கல்வி யறிவை பறைசாற்றும் கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
2019 ஆம் ஆண்டு மாநில தொல்லியல் துறை யின் தகவல்படி, கீழடி: வைகை நதிக்கரையில் சங்க காலத்தின் நகர்ப்புறக் குடியிருப்பு, ‘தமிழ்’ தமிழ்-பிராமி எழுத்துக்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பானைகள், மண் பாண்டங்கள், இரும்பு ஆயு தங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கண்டறியப் பட்டுள்ளன. தமிழ்-பிராமி எழுத்துக்கள், காலம் குறித்து ஆராய்வதற்குப் பயன்படும். கலையையும் ஒரு குலத்தையும் குறிக்கும் அடையாளமாக மீன் சின்னம், கண்டறியப் பட்டுள்ளது. அன்றைக்கு வசித்தவர்கள் பானை களை வாங்கிய பின் அதில் பெயர்களை எழுதி யிருக்க வாய்ப்புள்ளது. அது ஒரு கூட்டத்தின் பெயராகவோ அல்லது ஒரு தனிநபரின் பெயராகவோ இருக்கலாம்.
பானை ஓடுகளில் ஆதன், எய்யன், உதிரன், திசன், சாத்தன், செந்தனாவதி போன்ற பொது வான சங்க காலப் பெயர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. உடைந்த கறுப்பு-சிவப்புப் பாத்தி ரத்தின் கழுத்துப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள குவிரன்-ஆட எனப் படிக்கும் ஆறு எழுத்து தமிழ் வார்த்தை, ஒரு நபரின் பெயராக இருக்க லாம். இது பிராகிருதப் பெயரின் ஆச்சரியமான கண்டுபிடிப்பாகும். இது கீழடிக்கும் இலங்கைக் கும் இடையில் வர்த்தக தொடர்புகள் இருந்ததா என்பதை ஆராய்வதற்கு வழிவகுக்கின்றன. மாநில தொல்லியல்துறையின் அறிக்கையின் படி, “குகை மற்றும் மட்பாண்ட கல்வெட்டுகள் இரண்டிலும் அரிதாகவே காணப்படும் ஒரு கூட்டத்தின் பெயரைக்குறிக்கும் பெயரின் தொட க்கத்தில் ‘ஒ’ என்ற உயிரெழுத்து உள்ளது.” தமிழ் பிராமி எழுத்துகளுக்கும் சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களுக்கும் இடையி லான தொடர்பை கண்டுபிடிக்க, மாநில தொல்லி யல் துறை சென்னையில் உள்ள ஆய்வு நூலகத்துடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறது என்றார் சிவானந்தம்.
படம் உதவி : தி இந்து இணையதளம்