சென்னை, மார்ச் 19- ஒரேநாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் ஏப்.1 முதல் தமிழகத்தில் அமலாக்கப்ப டும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். பேரவையில் வியாழ னன்று (மார்ச் 19) கூட்டு றவு, உணவுத்துறை மானி யத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவா தத்திற்கு பதிலளித்து அமைச் சர் ஆர்.காமராஜ் பேசுகை யில், ஒரு குடும்ப அட்டைதா ரர் எந்த ஒரு ரேசன் கடைக் கும் சென்று பொருள் வாங் கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்க ளில் பரிச்சார்த்த முறையில் பிப்.1 முதல் 29ந் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் உள்ள 9 லட்சம் குடும்ப அட்டைதா ரர்களில் 9 ஆயிரம் பேர் கடை மாறி பொருட்களை வாங்கி யுள்ளனர். இதில் நடைமுறை சிக்கல் ஏதும் எழவில்லை. எனவே இத்திட்டம் தமிழகம் முழுவதும் ஏப்.1 முதல் அமல் படுத்தப்படும் என்றார். ஸ்மார்ட் அட்டை தொலைத் தவர்கள் புது அட்டை கேட்டு எழுத்துப்பூர்வமாக மனு அளித்தவர்களில் 8ஆயிரம் பேருக்கு புதிய அட்டை வழங் கப்பட்டுள்ளது. இணைய தளம் மூலம் விண்ணப் பித்துள்ளவர்களுக்கு ஏப்.1 முதல் புதிய அட்டை வழங் கப்படும் என்றும் அவர் கூறினார்.