what-they-told

img

கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர்

சென்னை,ஜன.27- தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு  இல்லை என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மேற்  கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகா தாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகி யோர், மத்திய சுகாதாரத்துறை அதிகாரி களுடன் காணொளிக் காட்சி மூலம், ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சீனாவில்  உள்ள தமிழக மாணவர்கள் குறித்து முதல மைச்சர் மூலம் தூதரக அதிகாரிகளுடன் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

;