what-they-told

img

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்

ஜூன் 22 முதல்  விநியோகம் செய்ய உத்தரவு

சென்னை, ஜுன் 17- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங் களை வரும் 22-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விநி யோகம் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதே சமயம், இந்த பாடப் புத்தகங்களை கிடங்குகளில் இருந்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வரும் 22-ந் தேதி முதல் எடுத்துச் சென்று விநியோகம் செய்ய வேண்டும்  என்றும் தெரிவித்துள்ள அவர், வரும் 30-ந் தேதிக்குள் பணி களை முடிக்க கோரியுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.