what-they-told

img

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பேராசிரியையின் உடல் உறுப்புகள் தானம்

7 பேர் மறுவாழ்வு பெற்றனர்

தஞ்சாவூர், மார்ச் 2-  தஞ்சையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தை சேர்ந்த இளங்கோ மகள் கனிமொழி (25), தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த பிப்.27 ஆம் தேதி, தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது, கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். அவர், தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கனிமொழி மூளைச்சாவு அடைந்ததை, டாக்டர்கள் உறுதி செய்தனர். பின், கனிமொழியின் உடல் உறுப்புகளை தானமளிக்க, அவரது பெற்றோர்கள் முன்வந்தார். ஒரு சிறுநீரகம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் தஞ்சை அரசு பொது மருத்துவமனைக்கும் என 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.