what-they-told

img

சீனாவில் மீண்டும் ஒரு தொற்று நோய்

சீனாவில், தற்போது மீண்டும் ஒரு கொடிய தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம்தான் பன்றிகள் வழியாக மனிதர்களு க்குப் பரவும் புது வகை வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தற்போதைக்கு அந்த வைரஸால் பாதிப்பு இல்லை என்றாலும், அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சீனாவின் தன்னாட்சி பகுதியான இன்னர் மங்கோலியாவின் உட்பகுதியில் புபோனிக் என்ற பிளேக் தொற்று உறுதியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இத னைத் தொடர்ந்து சீன அரசு பல முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னர் மங்கோலியாவின் பயனூர் என்ற நகரில் ஆடுகள் மேய்க்கும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை புபோனிக் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த நோ யாளிக்கு இந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான காரணம் இதுவரை கண்டறியப் படவில்லை.

தற்போது அந்த நோயாளி தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அவர் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் சீன அரசின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பொதுவாகக் கொறித்து உண்ணும் பழக்கமுடைய விலங்குகளில் ஒன்றான மர்மோட்டின் என்ற விலங்கின் இறைச்சியைப் பச்சையாக உண்பதால் இந்த பாக்டீரி யா மனிதர்களுக்குப் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  புபோனிக் தொற்றின் தீவிரத்தை நான்கு கட்டங்க ளாக அதிகாரிகள் அளவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது மூன்றாம் கட்ட எச்சரிக்கை மக்களுக்கு விடப்பட்டுள்ளது.

இந்த புபோனிக் தொற்றானது பாக்டீரியாக்கள் மூலமாக வரக்கூடியவை. இவை மோசமானவை என்றா லும் தற்போதைய அறிவியல் வளர்ச்சியில், இந்த பாக்டீ ரியாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஆண்டிபயாட்டிக் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர். புபோனிக் தொற்றின் அறிகுறிகள் ஃபுளூ காய்ச்சல் போலவே இருக்கும். எனவே இதனை முதலி லேயே கண்டறிவது மிகக் கடினம். இதன் அறிகுறியா னது தொற்று ஏற்பட்டு 3 முதல் 7 நாட்களுக்குள் தெரிய வரும்.நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1.2 கோடியாகும்.