சென்னை, நவ. 18- சர்க்கரை நோயை கட்டுப் படுத்த சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி அவசி யம் என்று பிரபல நீரிழிவு நிபு ணரும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தின் தலைவருமான டாக்டர் மோகன் கூறினார். சென்னை ராயப்பேட்டை யில் உள்ள நியபேக் டையக் னாஸ்டிக்ஸ் சார்பில் நோயாளிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் “நீரிழிவு வராமல் தடுப்ப தில் மற்றும் அதை வெற்றிகர மாக எதிர்கொள்வதில் புதிய முன்னேற்றங்கள் என்ன” என்ற தலைப்பில் அவர் பேசி னார், புதிய குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கொண்டு ஒரு நாள் முழுவ தும் நோயாளியின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்காணிக்க முடியும் என் றார். நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக வாழ்வ தற்கு சத்தான உணவை உட்கொள்வது அவசியம். அதே போல் நாள்தோறும் உடற்பயிற்சியும் அவசியம் என்றார்.
நீரிழிவு நோய் என்பது தற்போது பொது சுகாதாரத் துறைக்கு ஒரு சவாலான நோயாக மாறியுள்ளது. இந்தியாவில் இந்த நோய் பரவலாக காணப்படுகிறது. சென்னையில் 1997ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.6 விழுக்கா டாக இருந்தது. தற்போது இது 22.8 விழுக்காடாக அதிக ரித்துள்ளது.
நீரிழிவு நோயால் பல் வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுக்க முறை யாக பரிசோதனைகள் செய்து கொள்வது அவசி யம். இதனால் மேலும் பல உடல் உறுப்புகள் பாதிக்கப் படாமல் இருக்க அது உத வும். சமச்சீரான உணவை உட்கொள்வதன் வாயிலாக ரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டுப்படுத்த முடியும். உடல்பயிற்சியால் நல்ல கொழுப்பு அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறைந்து ரத்தத்தில் சர்க்கரை அள வும் குறையும். மேலும் மன அழுத்தத்தில் இருந்தும் விடு படமுடியும் என்றார் மோகன். நிகழ்ச்சிக்கு நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத் தின் தலைவர் டாக்டர். ஜி.எஸ்.கே. வேலு தலைமை வகித்தார்.