விழுப்புரம், ஏப்.18- விழுப்புரம் பானாம்பட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அரிசி ஆலை அதிபர் ஒருவர் இறந்துள்ளதால் அவர் வசித்து வந்த பகுதி தடை செய்யப்பட்டதோடு, தனிமைப்படுத்தப் பட்ட பகுதியாகவும் மாவட்ட நிர்வாகம் அறி வித்துள்ளது.
அந்த பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறும், அதுபோல் அப்பகு தியை சேர்ந்த யாரும் அங்கிருந்து வெளியே வராமல் இருக்கும் வகையிலும் அங்குள்ள பிரதான சாலைகளை காவல்துறையினர், பேரிகார்டுகள் மூலம் தடுப்பு அமைத்து அப்பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்கிறார்களா? என்றும் வெளி நபர்கள் யாரும் உள்ளே வருகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் அடங்கிய சிறப்பு குழுக் கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.