what-they-told

img

6 ஆயிரம் கடைகளில் 950 மதுக்கடைகள் மூடல்

சென்னை, பிப். 18- சட்டப்பேரவையில் நிதி  நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு  பேசிய திமுக உறுப்பினர் மனோதங்கராஜ், “மதுக் கடைகள் மூடுவதாக அறி வித்ததை இந்த அரசு செயல்படுத்தவில்லை. இதனால் அதன் வருமானம் இரண்டு மடங்கு அதிக ரித்துள்ளது”என்றார். இதற்கு பதில் அளித்த  அமைச்சர் தங்கமணி, படிப்படியாக மதுக்கடை களை குறைப்போம் என்று  அறிவித்தோம். அந்த அறி விப்பை வெளியிட்ட போது 6,215 மதுக்கடைகள் இருந்தன. தற்போது மூடப் பட்டு 5262 மதுக்கடைகள் மட்டுமே உள்ளது. டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரம்  2 மணி நேரம் குறைக்கப் பட்டுள்ளது என்று குறிப்  பிட்ட அமைச்சர் தங்கமணி,  மது விலை உயர்ந்துள்ள தால் தான் வருவாய் அதிக ரித்துள்ளது” என்றார்.