what-they-told

img

சென்னை திரும்ப 4,500 பேருந்துகள்

சென்னை,ஜன.16- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.  பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்க ளில் கொண்டாட செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக சிறப்பு  பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த வருடம்  கடந்த 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி அதி காலை வரை 17 ஆயிரம் பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்பட்டன. இதில் சுமார் 9 லட்சம் பயணிகள் பயணித்தனர்.

கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 2 லட்சம்  பயணிகள் அதிகளவு பயணம் செய்துள்ளனர். பொங்கல் முடிந்த நிலையில், தனியார் நிறு வனங்கள், கடைகளில் வேலை பார்க்கக் கூடியவர்கள் சென்னை திரும்ப வசதி யாக வியாழன்(ஜன.16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் 19 ஆம் தேதி வரை சென் னைக்கு 4,500 சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன. மற்ற நகரங்களிலிருந்து பிற ஊர்களுக்கு 9,370 சிறப்பு பேருந்து களும், சேலம், மதுரை, திருச்சி, தேனி, நெல்லை ஆகிய நகரங்களிலிருந்து திருப்  பூர் மற்றும் கோவைக்கு சிறப்பு பேருந்து கள் 1,200 முதல் 1,525 வரை இயக்க திட்ட மிட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து பெங்களூருக்கு 376 சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக அனைத்து முக்கிய நகரங்க ளிலும் வியாழக்கிழமை (ஜன.16) முதல் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பெருங்களத்தூர் முதல் கூடு வாஞ்சேரி வரை வாகன நெரிசல் ஏற்படாமல்  இருக்க காவல்துறையினர் குவிக்கப்படு கின்றனர். டோல்கேட் மையங்களிலும் வாக னங்கள் எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்  பட்டுள்ளது. கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர்,  மாதவரம், தாம்பரம் ஆகிய பேருந்து நிலை யங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்படு கின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தி லிருந்து 24 மணி நேரமும் மாநகர பேருந்து கள் இயக்கப்படுகிறது.

;