what-they-told

img

கீழடியை சங்ககால வாழ்வியல் நகராக அறிவிக்க வேண்டும்

மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரை, செப்.7- கீழடி, கொந்தகை, மணலூர், அக ரம் ஆகிய ஊர்களை சங்ககால  வாழ்வியல் நகராக அறிவித்து அவற்றைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறி னார். கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாம்கட்ட அகழ்வாய்வுப்பணி களை சனிக்கிழமை பார்வையிட்ட அவர், காப்பாட்சியரையும் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார்.

பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்

பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் தமிழக அரசு நவீன தொழில் நுட்பங்க ளைப் பயன்படுத்தியுள்ளது பாராட் டத்தக்கது. மத்திய தொழில் துறை இரண்டாம் கட்ட ஆய்வு நடத்திய போது தொழிற்கூடங்கள் இருப்ப தற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றன.  அதே நேரத்தில் மத்திய அரசு மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடத்தி யபோது அதன் பொறுப்பாளராக இருந்த ஸ்ரீராமன் கீழடியில் கட்டு மானப் பணிகள் நடைபெற்றதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெ னக்கூறி ஆய்வையே ஊற்றி மூட நினைத்தார். ஆனால், மாநில அரசு அகழ்வாய்வுப் பணியை மேற் கொண்டு, அங்கு கட்டடங்கள் இருந் துள்ளன என்பதை உலகிற்கு வெளிச் சம் போட்டுக் காட்டியுள்ளது. ஐந் தாம் கட்ட ஆய்வில் இரண்டாம் கட்ட ஆய்வின் தொடர்ச்சியாக நீண்ட கட்டடங்கள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக மூன்று ஹாக்கி மைதானம் அளவிற்கு மிகப் பெரிய தொழிற்சாலை இயங்கி யிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அப்படியெனில் இங்கு எவ்வளவு பேர் பணியாற்றியிருப் பார்கள். அவர்களது வாழ்நிலை எப்படியிருந்திருக்கும் என்பதெல் லாம் பிரமிக்கத்தக்கக் கூடிய விஷ யங்களாகும். எனவேதான், கீழடி தமி ழர்களின் தாய்மடி என்று சொல்லி வருகிறோம்.

ஐந்தாம்கட்ட ஆய்வில், ஒரு செ.மீ உயரம் மட்டுமே உள்ள சுடுமண்ணால் செய்யப்பட்ட குடுவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமூட்டக் கூடிய வகையில் விரல் நகம் அளவே உள்ள சூதுபவ ளத்தில் பன்றியின் உருவம் பொறிக் கப்பட்டுள்ளது. இப்பொருட்கள் நம்முடைய கலைமரபு, தொழில் நுட்ப மரபின் உச்சமாக அமைந் துள்ளது. இதுபோன்று கண்டெ டுக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைக்க வேண்டும். தற்போது வரை நமக்குக் கிடைத் திருப்பது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகத்தின் வால்பகுதி தான். உடல்பகுதியையும், தலையை யும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய ஊர்களிலும் ஆய்வு நடத்த வேண்டும். ஆறாம் கட்ட ஆய்விற்காக மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது.  அனுமதியளித்தவுடன் இந்த ஊர்களி லும் ஆய்வுகள் நடைபெறுமென நம்பு கிறேன்.

கீழடி, கொந்தகை, மணலூர், அக ரம் ஆகிய ஊர்களை சங்ககால வாழ்வியல் நகராக அறிவித்து, அவற்றை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு கீழடியைப் போன்ற ஆய்வுக்கான ஒரு தாய்மடி கிடைக்குமா எனத் தெரியாது. எனவே இதை மிகப்பெரிய அரசி யல் விழிப்புணர்வு மூலம் மட்டுமே காப்பாற்றமுடியும்.

ஆய்வு முடிவுகள்-மௌனம் காக்கும் அரசு

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காலப்பகுப்பாய்வுக் காக அமெரிக்காவுக்கும், எலும்பு பகுப்பாய்வுக்கு புனேயில் உள்ள தக்காணப் பல்கலைக் கழகத்திற்கும், செங்கல், சுண்ணாம்பு போன்ற பொருட்களின் நிறமாலை பகுப்பாய் வுக்கு இத்தாலியில் உள்ள பல்க லைக் கழகத்திற்கு அனுப்பியுள்ள னர். அனுப்பிய பொருட்களின் முடிவு கள் எல்லாம் வந்துவிட்டதா? அப்படி வந்துவிட்டால் தமிழக அரசு இது வரை ஏன் வெளியிடாமல் இருக்கிறது என்ற கேள்வி இருக்கிறது. எனவே, தமிழக அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்களின் ஆய்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.  கீழடியில் ஒரு அருங்காட்சியக மும், மதுரையில் சர்வதேச தரத்தில் மரபு சார் அருங்காட்சியகமும் அமைக்க வேண்டும். இதை மத்திய-மாநில அரசுகளிடம் வலி யுறுத்துவேன்.

கல்வெட்டுப் படிமங்கள்

கர்நாடக மாநிலம் மைசூரில் தமிழ கத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் கல் வெட்டு படிமங்கள் அழியும் நிலை யில் உள்ளன. அவற்றை உடனடி யாக தமிழகத்திற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி, ஆதிச்சநல்லூர், பொருந் தல், அரிக்கன்மேடு ஆகியவை சங்க கால நாகரிகத்தை பறைசாற்றுவதாக உள்ளன. கீழடியைத் தொடர்ந்து மற்ற ஊர்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட நாட்களாக ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் முடிவுகள் வெளி யிடப்படாமல் உள்ளது. அதை உட னடியாக வெளியிட வேண்டும்.

மதுரையில்  தொல்லியல்துறை அலுவலகம்

கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் மத்திய தொல்லியல்துறை அலுவல கங்கள் மூன்று மண்டலமாக அமைந் துள்ளது. ஒரு மண்டலத்திற்கு ரூ. 5 கோடி வீதம் மொத்தம் ரூ. 15 கோடி நிதி ஒதுக்குகின்றனர். ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்தில் ஒரு மண்டல மாக மட்டும் உள்ளது. இதற்குரிய நிதி ரூ.5 கோடிக்கும் குறைவாக உள்ள தால் சமண படுகைகள் போன்ற தொல்லியல் இடங்களை பாதுகாக்க முடியவில்லை. எனவே மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மண்டலமாக பிரித்து, தொல்லியல் இடங்களை பாதுகாக்கவும், வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.

பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் மு.கந்தசாமி, எம்.முத்துராம லிங்கபூபதி. திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி, சக்தி வேல், தனுஷ்கோடி ஆகியோர் உடனி ருந்தனர்.

நமது நிருபர்
படங்கள்: ஜெ.பொன்மாறன்