what-they-told

img

ஆயிரம் நாள் ஆன் லைன் ஓவியக் கண்காட்சி

 தேசாபிமானி நாளிதழின் பீர்மேடு தாலுகா (இடுக்கி மாவட்டம்) நிருபரும் ஓவியருமான கே.ஏ.அப்துல் ரசாக் வரைந்த ஓவியங்களின் ஆன்லைன் கண்காட்சி அகில இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினமான 2021 ஜூலை 27 அன்று இந்த ஆன்லைன் ஓவியக் கண்காட்சியை கே.ஏ.அப்துல் ரசாக் துவக்கினார். இந்த ஓவியக் கண்காட்சியில் 580 நாட்களில் 4100 ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. முதல் 400 நாட்கள் ஓவியத்தில் இடம் பெறுபவரின் 8 விதமான முகபாவங் களுடன் கூடிய ஓவியங்களும் தொடர்ந்து 5 விதமான முகபாவங்களுடன் கூடிய ஓவியங்களும் காட்சிப்படுத் தப்பட்டன. தொடர்ந்து ஆன்லைன் ஓவியக் கண்காட்சியை நடத்திவரும் கே.ஏ.அப்துல் ரசாக் 1000 நாட்கள் வரை கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளார். கோவிட் காலத்தில் துவக்கப்பட்ட இந்த ஆன்லைன் கண்காட்சியில் கலை, இலக்கியம், அரசியல், ஆட்சி அதிகாரம், அறிவியல், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்து சுமார் 100 நாடு களைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது. உலக ஓவியக் கலை வரலாற்றில் இதுபோன்றொரு ஆன்லைன் ஓவியக் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.  இதுவரை 9000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ள கே.ஏ.அப்துல் ரசாக் ஆசிய சாதனைப் புத்தகம், இந்திய சாதனைப் புத்தகம், யுனிவர்சல் சாதனை இயக்கம் முதலிய பல்வேறு சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளார். இடுக்கி மாவட்டத்தின் எல்லையோர ஏலக்காய் கடத்தல் குறித்து செய்திக் கட்டுரை வெளியிட்டதற்காக 2010ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் ஊடக விருதும் ரூபாய் 25000 ரொக்கப் பரிசும் பெற்றுள்ளார். கே.ஏ.அப்துல் ரசாக்கிற்கு சபீனா என்ற மனைவியும்,  அஜ்மியா ரசாக், ஆஷ்னா ரசாக் என்ற மகள்களும் உள்ளனர்.  நன்றி: தேசாபிமானி