பெங்களூரு, ஜூன் 16 - கர்நாடகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்த சித்தராமையா அரசு, கடந்த பாஜக ஆட்சிக் காலத்தில் பள்ளிப் பாடத்திட்டங்களில் புகுத்தப்பட்ட வி.டி. சாவர்க்கர், கே.பி. ஹெட்கேவாரின் மதவெறிக் கருத்துக்களும் நீக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில், நீக்கப்படும் அந்தப் பாடத்திட்டங்களுக்குப் பதிலாக, மாணவர்கள் இனிமேல், இந்தியா வின் முதல் பெண் ஆசிரி யையான சாவித்ரி பாய் பூலே, இந்திய அரசியல் சாசன சிற்பிடாக்டர் அம்பேத்கர் ஆகியோர் குறித்த பாடங்களைப் படிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. “நடப்புக் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடபுத்தகங்களில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் மற்றும் இந்துத்துவா சித்தாந்தவாதி வி.டி. சாவர்க்கர் உள்ளிட்டோர் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்படும். சாவித்ரி பாய் பூலே, இந்திரா காந்திக்கு நேரு எழுதிய கடிதங்கள் மற்றும் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய கவிதைகள் குறித்த அத்தி யாயங்கள் சேர்க்கப்படும்” என கூறியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் வி.டி. சாவர்க்கர், கே.பி. ஹெட்கேவார் தொடர்பான பாடங்கள் இடம்பெற்றது பெரும் விவாத மானது. குறிப்பாக, சாவர்க்கர் குறித்த பாடம், நாடு முழுவதும் பெரும் நகைப்புக்கு உள்ளானது. ஏனெனில், “சாவர்க்கர் அடைக்கப்பட்ட அந்தமான் அறையில் ஒரு சிறிய சாவித் துவாரம் கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவைகள் எங்கிருந்தோ அவரது அறைக்கு வரும்” எனவும், “சாவர்க்கர் ஒவ்வொரு நாளும் இந்தியாவிற்குச் செல்ல அந்த பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்” என்றும் இடம்பெற்றிருந்த கட்டுக்கதைகள் கல்வியாளர்களின் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகின. வரலாறு என்ற பெயரில், இதுபோன்று புகுத்தப்பட்டிருந்த மாயாஜால கட்டுக்கதைகளைத்தான் சித்தராமையா அரசு தற்போது நீக்குவதாக அறி வித்துள்ளது. பெண்கள் படிக்கக் கூடாது என்ற காலத்தில், மகாத்மா ஜோதிபா பூலே-வால் உருவாக்கப்பட்டு, பெண்களுக்கு கல்வி கற்றுத் தந்த, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரி பாய் பூலே, உலக அரசியல் வரலாற்றை மகளுக்கான கடிதங்களில் கற்றுக் கொடுத்த நேருவின் கடிதங்களையும், டாக்டர் அம்பேத்கர் குறித்த கவிதைகளையும் சேர்த்துள்ளது.