ஊடக சுதந்திரத்தின் மீது மோடி அரசு மூர்க்கத்தனமான தாக்குதல் தொடர்கிறது
முதலில் பிபிசி ஆவணப் படங்களுக்கு தடை விதித்தார்கள். பிறகு, அதானி ஊழலுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை இல்லை என்றார்கள். இப்போது, பிபிசி அலுவலகங்களில் ஐ.டி. ரெய்டு நடத்துகிறார்கள். இப்போது சொல்லுங்கள்: இந்தியா - ஜனநாயகத்தின் தாயா?
சீத்தாராம் யெச்சூரி, சிபிஎம் பொதுச் செயலாளர்
புதுதில்லி, பிப்.15- பிரதமர் மோடிக்கு எதிரான ஆவ ணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறு வனத்தின் தில்லி, மும்பை அலுவல கங்களுக்குள், செவ்வாயன்று வரு மான வரித்துறை புகுந்தது. அங்கு காலை 11.30 மணிக்குத் துவங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. வருமான வரித்துறை அதிகாரி களின் இந்தச் சோதனை, மோடி அரசின் பழிவாங்கல் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகளும், இது ஊடகங்களை அச்சுறுத்தும் முயற்சி என்று பத்திரி கையாளர்களும், கருத்துச் சுதந்தி ரத்தை முடக்கும் முயற்சி என்று சர்வ தேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. ஊடகங்களை அச்சுறுத்தும் இது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; மோடி அரசின் இதுபோன்ற மிரட்டல் முயற்சிகள் நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும் சுட்டிக்காட்டின. ஆனால், மோடி அரசின் வருமான வரித்துறையானது, இரண்டாவது நாளாக புதன்கிழமையன்றும், பிபிசி அலுவலகத்தில் சோதனை நடத்தி தனது அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது.
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது, இஸ்லாமி யர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட மத வன்முறைகள் தொடர்பாக, பிபிசி ((British Broadcasting Corporation - BBC) செய்தி நிறுவனம், ஆவ ணப்படம் ஒன்றை அண்மையில் வெளி யிட்டது. ‘இந்தியா- மோடி என்கிற கேள்வி’ (India: The Modi Question) என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியான, இந்த ஆவணப் படம், 2002 குஜராத் வன்முறையில் அன்றைய முதல்வர் நரேந்திர மோடிக்கு நேர டித்தொடர்பு இருந்தது என்பதை உரிய ஆதாரங்களோடு எடுத்துக் காட்டும் வகையில் இருந்தது. இதனால் பதறிப்போன நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-இன் விதி 16- வழங்கும் அவசரகால தணிக்கை அதிகாரங்க ளைப் பயன்படுத்தி, இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்தது. யூடியூப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் பிபிசி ஆவ ணப்படம் ஒளிபரப்பப்படுவதை தடுத்து நிறுத்தியது. எனினும், வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளின் மூலமாக இந்தப் படம், இந்தியாவிலுள்ள பல் வேறு மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர்களால் திரையிடப்பட்டன. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இப்படத்தை பொது இடங்களில் திரையிட்டு, நரேந்திர மோடியின் மதவெறி கோர முகத்தை அம்பலப்படுத்தினர்.
இந்தப் பின்னணியிலேயே, செவ் வாயன்று தில்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள பிபிசி அலுவலகங்க ளுக்குள் மோடி அரசின் வருவான வரித் துறை புகுந்து சோதனையில் ஈடுபட்டது. “இது வருமான சோதனை அல்ல, கணக்கு ஆய்வு மட்டுமே” என்றும், “வருமான வரித்துறை இயக்குநர் உத்த ரவின் அடிப்படையிலேயே பிபிசி துணை நிறுவனங்களின் சர்வதேச வரி விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆய்வை மேற்கொள்கிறோம்” எனவும் கூறிக்கொண்டே, மறுபுறத்தில், பிபிசி ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். பிபிசி ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறவும் அனுமதிக்கவில்லை. வருமான வரித்துறையின் இந்த சோதனைக்கு ‘இந்திய பத்திரிகை ஆசி ரியர்கள் சங்கம்’ (Editors Guild of India) கடும் கண்டனம் தெரிவித்தது. “அரசின் கொள்கைகள் அல்லது ஆளும் கட்சி குறித்து விமர்சிக்கும் பத்தி ரிகை அமைப்புகள் மீது மத்திய விசா ரணை அமைப்புகளைக் கொண்டு மிரட்டும் மற்றும் துன்புறுத்தும் போக் கின் தொடர்ச்சியே, பிபிசி அலுவலக வருமான வரித் துறை ஆய்வு” என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங் கம் தெரிவித்தது.
“இதற்கு முன்பு நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்டரி செய்தி நிறுவனங்க ளின் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். எப்பொழுது எல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைக் கப்படுகிறதோ, அப்பொழுது எல்லா அரசாங்கத்தின் முகமைகள் செய்தி நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படு கின்றன. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் செயல். இது மக்களாட்சிக்கு எதிரான போக்கு. சோத னைகளானது வரையறுக்கப்பட்ட விதி களுக்குள் இருக்க வேண்டும். மேலும் ஊடகங்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் அரசாங்கம் இருக்க வேண் டும்” எனவும் இந்திய பத்திரிகை ஆசி ரியர்கள் சங்கம் கூறியது. “ஆளும் பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்களை மூடி மறைப்பதற்காக பிபிசி நிறுவனத்தை சோதனை மூலம் மிரட்ட முயற்சிப்பதாகவும், அரசுக்கு எதிரான கருத்துகளை முடக்குவதற் காக வருமான வரித்துறையின் பரந்த அதிகாரங்கள் மீண்டும் மீண்டும் ஆயு தமாக்கப்படுகின்றன” என்றும் சர்வ தேச மனித உரிமை அமைப்பான ‘அம் னெஸ்டி இன்டர்நேஷனல்’ (Amnesty International) சாடியது. “ஒன்றிய அரசின் கருத்துக்களோடு உடன்படாத ஊடகங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக மும்பை செய்தி யாளர்கள் சங்கம் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. “ஊடகங்கள் மட்டுமல்லாது, அவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் வீடுகளிலும் ஐ.டி சோதனைகள் நடத்தப் படுகிறது; செய்தி ஊடகங்களை அச்சு றுத்தும் போக்கு ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களை அச்சுறுத்தும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தியது.
“மோடி அரசின் கீழ் பத்திரிகை சுதந்திரம் மீது மீண்டும் மீண்டும் தாக்கு தல் நடத்தப்பட்டிருக்கிறது. இது விமர் சன குரல்களை நெரிக்கும் வெட்கக் கேடான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எதிர்க்கட்சிகளையும் ஊட கங்களையும் தாக்குவதற்கு மத்திய நிறுவனங்களை பயன்படுத்தினால் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது. இதை மக்கள் எதிர்ப்பார்கள்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்தார். “முதலில் பிபிசி ஆவணப்படங் களை தடை செய்தார்கள். பின்னர், அதானி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை மறுத்தார்கள். இப்போது பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள் நடக்கின் றன... இந்தியா: ஜனநாயகத்தின் தாய் என்பது இதுதானா?” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பி னார். “ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண், அதன் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒப்பாகும்” என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பா ளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். “பாஜக வுக்கு எதிராக யார் பேசினாலும், அவர் கள் பின்னால் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை நிறுத்துகிறார்கள். இதன்மூலம் நாட்டின் ஜனநாயக அமைப்பை நசுக்கி, ஒட்டு மொத்த நாட்டையும் தனது அடிமையாக மாற்ற பாஜக விரும்புகிறதா?” என்றும் அவர் விமர்சித்தார்.
“குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி, ஆளும் பாஜக மீது கடுமையான அரசியல் விவாதத்தை முன்வைத்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இது நடைபெற்ற சில வாரங்களில் இவ்வாறான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டினார். “ஒரு அரசாங்கம் அச்சமின்மைக்கு பதிலாக, அச்சம் மற்றும் ஒடுக்கு முறைக்காக நிற்கும் போது, அவர் களுக்கு முடிவு நெருங்கிவிட்டது என் பதை உணர வேண்டும்” என்று சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சாடி னார். “பிபிசியின் தில்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத் தப்பட்டது. ஆஹா, உண்மையில்? எவ் வளவு எதிர்பாராதது” என்று கூறி, இது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்தார். ஆனால், பாஜக செய்தித் தொடர்பா ளர் கவுரவ் பாட்டியா பிபிசி-யை “உல கின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு” என்று சாடியதுடன், “நீங்கள் (பிபிசி மோடிக்கு எதிராக) விஷத்தை கக் காத வரையில், ஒவ்வொரு அமைப் புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந் தியா” என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அத்துடன், “வருமான வரிச் சோதனைகள் சட்டபூர்வமானவை. அது நடக்கும் நேரத்திற்கும் அர சாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றும் கூறிக் கொண்டார்.
இந்நிலையில், பிபிசி அலுவல கத்தில் செவ்வாயன்று இரவு விடிய விடிய சோதனை நடத்திய மோடி அர சின் வருமான வரித்துறை, புதனன்று இரண்டாவது நாளாகவும் சோதனை யைத் தொடர்ந்துள்ளது. இதையொட்டி, தனது ஊழி யர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய பிபிசி நிறுவனம், “ஒளிபரப்புத்துறை ஊழியர்களைத் தவிர மற்ற துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும்; ஊழியர்கள் தனிப்பட்ட வருமானம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்; மற்ற படி ஊதியம் தொடர்பாக கேட்கப் படும் அனைத்து கேள்விகளுக்கும் விரி வான பதில் அளிக்க வேண்டும், அதி காரிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.