what-they-told

img

தாஜ்மகால், ஆக்ரா கோட்டைக்கும் வீட்டுவரி போட்ட உ.பி. பாஜக அரசு!

புதுதில்லி, டிச. 20 - உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலுக்கு 2021-22, 2022-23 நிதியாண்டிற்கான சொத்து வரியாக ரூ. 1.47 லட்சமும், குடிநீர், கழிவுநீர் மேலாண்மை வரியாக ரூ. 1.96 கோடியும் செலுத்த வேண்டும் என்று இந்திய தொல்லி யல் துறைக்கு உ.பி. பாஜக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இந்த வரி பாக்கிகளை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், தாஜ்மகாலை மூடி சீல் வைப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள் ளது. தாஜ்மகால் மட்டுமன்றி, ஆக்ரா கோட்டைக்கும் ரூ. 5 கோடி வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தாஜ்மகாலின் 370 ஆண்டு கால வர லாற்றில், சொத்து வரி, குடிநீர் கேட்டு இது போல நோட்டீஸ் விடுப்பது இதுவே முதல் முறை என்பதால், இது தொல்லியல்துறை யை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தொல்பொருள் துறை கண்காணிப் பாளர் ராஜ்குமார் படேலும்,

இவ்வாறு  நோட்டீஸ் வந்திருப்பதை உறுதிப்படுத்தி யுள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பாக்கி வைத்திருப்ப தாக தாஜ்மகாலுக்கு 2 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளன. மொத்தம் ரூ. 1 கோடிக்கும் மேல் வரி கட்டக் கோரி தொல்லி யல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. புராதன சின்னங்களுக்கு இதுபோன்ற வரி விதிப்பு பொருந்தாது. எனவே, தவறுதலாக இது அனுப் பப்பட்டு இருக்கிறது. பிற மாநிலங்களில் உள்ளது போன்ற விதிகள்தான் உத்தரப் பிரதேசத்திலும் உள்ளது. எனவே சொத்து வரி புராதன சின்னங்களுக்கு பொருந்தாது. தண்ணீர் வரியை பொறுத்தவரை, இதற்கு முன்பாக இப்படி ஒரு கோரிக்கை வர வில்லை.  வணிக நோக்கங்களுக்காக தண்ணீரை பயன்படுத்தவில்லை. தாஜ்மகால் வளா கத்தில் உள்ள புல்வெளிகளுக்கு பயன் படுத்தப்படும் நீர் பொதுச் சேவைக்கானது. எனவே நிலுவைத்தொகைகள் என்ற கேள்விக்கே இங்கு இடம் இல்லை” என்று கூறியுள்ளார்.